2 வருஷத்துல 30 ஆயிரம் கோடி அடிச்சவங்களுக்கு 'செக்' வைக்கத்தானே இந்த அதிரடி முடிவு!
2 வருஷத்துல 30 ஆயிரம் கோடி அடிச்சவங்களுக்கு 'செக்' வைக்கத்தானே இந்த அதிரடி முடிவு!

2 வருஷத்துல 30 ஆயிரம் கோடி அடிச்சவங்களுக்கு 'செக்' வைக்கத்தானே இந்த அதிரடி முடிவு!

Updated : மே 22, 2023 | Added : மே 22, 2023 | கருத்துகள் (19) | |
Advertisement
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி:ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது போன்ற முடிவுகளை எடுக்கும் போது, மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டிருக்க வேண்டும். இதுபோன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன், மாநில அரசுகளிடம், முறைப்படி ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் போது, கலந்து
This actionable decision is to put a check for 30 thousand crores in 2 years!  2 வருஷத்துல 30 ஆயிரம் கோடி அடிச்சவங்களுக்கு 'செக்' வைக்கத்தானே இந்த அதிரடி முடிவு!


தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி:

ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது போன்ற முடிவுகளை எடுக்கும் போது, மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டிருக்க வேண்டும். இதுபோன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன், மாநில அரசுகளிடம், முறைப்படி ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் போது, கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பது தான், தமிழக அரசின் நிலைப்பாடு.


இவங்களிடம் கருத்து கேட்டா மட்டும், உடனே, 'ஓகே'சொல்லியிருப்பாங்களா... ரெண்டு வருஷத்துல, 30 ஆயிரம் கோடி அடிச்சவங்களுக்கு, 'செக்' வைக்கத்தானே இந்த அதிரடி முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது!



முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:

ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து இருப்பது, மிகவும் வரவேற்கத்தக்கது. எனினும், வங்கி அல்லாத மற்ற இடங்களில், குறிப்பாக டாஸ்மாக், கூட்டுறவு வங்கிகள், முத்திரைத்தாள் விற்பனை போன்றவற்றில், எந்த அளவுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை, ஒரு நபரிடம் இருந்து பெற முடியும் என்பது குறித்து, எந்தவித அறிவிப்பும் வராததால், இதுபோன்ற இடங்களில் அதிகார வர்க்கத்தினர் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.


இதுல இருந்து, இவங்க தரப்பிடம், 2000 ரூபாய் நோட்டுகள் இப்போதைக்கு, 'ஸ்டாக்' இல்லை என்பது தெளிவாக தெரியுது!


latest tamil news


தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:

திராவிட மாடல் ஆட்சியில்,10ம் வகுப்பு தமிழ் தேர்வில், 36 ஆயிரம் பேர் தோல்வி. தி.மு.க., நடத்தும் குடும்பப்பள்ளிகளில், போதனா மொழி தமிழ் இல்லை. ஆங்கிலமும், ஹிந்தி மட்டுமே. கழக குடும்ப குழந்தைகள், வெளிமாநிலங்கள், நாடுகளில் படிக்கின்றனர். ஏமாந்தவர்கள், தமிழகத்தின் ஏழை பச்சை தமிழ் மாணவர்கள் மட்டுமே; அந்தோ பரிதாபம்.


'தமிழ் என் பேச்சு, மூச்சு என்பதெல்லாம் மேடைகளில் மட்டும் தான்... எங்க வாழ்வில் அதை எல்லாம் கண்டுக்கவே மாட்டோம்' என்பதற்கு இது ஒரு உதாரணம்!



பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு, 1,021 டாக்டர்களை நியமிக்க, கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. கொரோனா காலத்தில் குறைந்தது, 100 நாட்கள் பணியாற்றிய டாக்டர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. ஆனாலும், டாக்டர்கள் நியமன அறிவிப்பில் அது பற்றி எதுவும்குறிப்பிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.


அவங்களுக்கெல்லாம் முன்னுரிமை தந்தா, பணி நியமனங்கள்ல, 'பலன்' பார்க்க முடியாதே!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (19)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
22-மே-202319:09:43 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy ஸ்கொயர் பண்ணியாச்சு. தங்கள் தூங்கிவிட்டாரா.
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
22-மே-202313:53:31 IST Report Abuse
தஞ்சை மன்னர் .""" ரெண்டு வருஷத்துல, 30 ஆயிரம் கோடி அடிச்சவங்களுக்கு, 'செக்' வைக்கத்தானே இந்த அதிரடி முடிவை ரிசர்வ "" அட அட என்ன ஒரு புத்திசாலி கண்டுபிடிப்பு இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் இருக்கும் தமிநாட்டுக்க மட்டுமே 2000 இரண்டாயிரம் ரூபாய் அச்சடிக்கப்பட்டு இருக்கு என்று இப்போதுதான் தெரியவந்து இருக்கு அட அட என்ன ஒரு புத்திசாலி
Rate this:
Cancel
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா
22-மே-202312:02:00 IST Report Abuse
திகழ்ஓவியன் நாளை முதல் வங்கிகளில் மக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொள்ளலாம். இந்நிலையில் வங்கிகளுக்கு சில முக்கிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது, வங்கிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு வங்கிகள் குடிநீர், அமரும் இடம், என அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் இது போன்று சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன்படி ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களிடம் அடையாள அட்டையின் நகல் கேட்கக்கூடாது என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. / ஆனால் அன்று இதே 2000 வாங்க ஆதார் வேண்டும் என்று அலைக்கழித்தார்கள் அனால் இன்று எந்த ID தேவை இல்லையாம் , ஏழைகள் இடம் இல்லை அப்புறம் ஏண் ஒழிக்கணும், மீண்டும் பணக்காரன் எல்லாம் வேலைக்காரனிடம் கொடுத்து வங்கி வங்கியா அனுப்பி கருப்பு பணத்தை வெள்ளை பணமா மாற்றி கொள்ள போகிறான் மோடி கறுப்புப்பணம் ஒழித்து விட்டார் ஜெய் HINDH
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X