கள்ளக்குறிச்சி : அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டது.
தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறியும் வகையில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் அறியும் வகையில், புகைப்பட தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள், அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், முதல்வரின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்படங்கள் காட்சியில் இடம் பெற்றிருந்தன.