பூச்சி மருந்து குடித்துவிட்டு 'வாட்ஸ் ஆப் 'பில் உதவிகேட்டவர் சாவு

Added : மே 23, 2023 | |
Advertisement
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே பெற்றோர்கள் திட்டியதால் வாலிபர் பூச்சி மருந்து குடித்து இறந்தார்.நடுவீரப்பட்டு அடுத்த ஒதியடிக்குப்பம் தெற்குதெருவை சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவரது மகன் தனுஷ்,20; இவர் கடந்த ஆண்டு கடலுார் அரசு கல்லுாரியில் சேர்ந்து படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இதனை பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் நேற்று முன்தினம்



நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே பெற்றோர்கள் திட்டியதால் வாலிபர் பூச்சி மருந்து குடித்து இறந்தார்.

நடுவீரப்பட்டு அடுத்த ஒதியடிக்குப்பம் தெற்குதெருவை சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவரது மகன் தனுஷ்,20; இவர் கடந்த ஆண்டு கடலுார் அரசு கல்லுாரியில் சேர்ந்து படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இதனை பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி நிலத்தில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு ஆபத்தான நிலையில் தமது நண்பருக்கு வாட்ஸ்அப் மூலம் காப்பாற்றுங்கள் என செய்தி அனுப்பினார்.

உடன் உறவினர்கள் தனுஷை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X