22 நாட்களாக மின்சாரம் இல்லை சாலையை மறித்த கிராம மக்கள்

Added : மே 23, 2023 | |
Advertisement
சிங்கம்புணரி, ; சிங்கம்புணரி அருகே 22 நாட்களாக மின்சாரமும் 8 நாட்களாக குடிநீரும் இல்லாமல் தவித்த கிராம மக்கள் பொறுமை இழந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இவ்வொன்றியத்தில் வடவன்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த 22 நாட்களாக போதிய மின்சாரம் கிடைக்காமல் குறைந்தழுத்த மின்சாரமே வந்துள்ளது. இதனால்
Villagers blocked the road without electricity for 22 days   22 நாட்களாக மின்சாரம்  இல்லை சாலையை மறித்த கிராம மக்கள்



சிங்கம்புணரி, ; சிங்கம்புணரி அருகே 22 நாட்களாக மின்சாரமும் 8 நாட்களாக குடிநீரும் இல்லாமல் தவித்த கிராம மக்கள் பொறுமை இழந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இவ்வொன்றியத்தில் வடவன்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த 22 நாட்களாக போதிய மின்சாரம் கிடைக்காமல் குறைந்தழுத்த மின்சாரமே வந்துள்ளது. இதனால் பம்புசெட் உள்ளிட்ட மின் உபகரணங்கள் சரிவர இயங்கவில்லை. இதன் காரணமாக கடந்த 8 நாட்களாக இப்பகுதிக்கு மட்டும் ஊராட்சி நிர்வாகத்தால் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. அருகேயுள்ள கண்மாயில் தண்ணீர் எடுத்து வந்தனர். நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் பொறுமை இழந்த கிராம மக்கள் நேற்று காலை அரளிக்கோட்டை - மேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தாசில்தார் சாந்தி, போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். ஒரே நாளில் மின்சார குடிநீர் பிரச்னையை சரி செய்வதாக உறுதியளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X