மதுராந்தகத்தில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

Added : மே 23, 2023 | |
Advertisement
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில், கல்குவாரியில் இருந்து கருங்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி கவிழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32; டிப்பர் லாரி ஓட்டுனர். இவர், நேற்று மேல்மருவத்துாரில் இருந்து திரிசூலத்திற்கு டிப்பர் லாரியில் கருங்கல் ஏற்றிக் கொண்டு, கருங்குழி அருகே சென்ற போது, தனியார் சொகுசு
Truck overturns in Madhuranthak, causing traffic damage   மதுராந்தகத்தில் லாரி கவிழ்ந்து  போக்குவரத்து பாதிப்பு



மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில், கல்குவாரியில் இருந்து கருங்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி கவிழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32; டிப்பர் லாரி ஓட்டுனர். இவர், நேற்று மேல்மருவத்துாரில் இருந்து திரிசூலத்திற்கு டிப்பர் லாரியில் கருங்கல் ஏற்றிக் கொண்டு, கருங்குழி அருகே சென்ற போது, தனியார் சொகுசு பேருந்து முந்த முயன்றது.

அப்போது, டிப்பர் லாரி ஓட்டுனர் 'பிரேக்' பிடித்ததில், நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.

லாரியில் இருந்த கருங்கல் சாலையில் சிதறின.

இதனால், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த மதுராந்தகம் போலீசார், ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் கருங்கல் சக்கைகளை அப்புறப்படுத்தி, டிப்பர் லாரியை மீட்டு, போக்குவரத்தை சரிசெய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X