நெல்லிக்குப்பம் நகராட்சியில் லாரியில் குடிநீர் வினியோகம்

Added : மே 23, 2023 | |
Advertisement
நெல்லிக்குப்பம் : தினமலர் செய்தி எதிரொலி காரணமாக நெல்லிக்குப்பத்தில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் தினமும் காலை மாலை இரு வேளைகள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ராமு தெரு, கைலாசநாதர் கோவில் உட்பட பல பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்களுக்கு நோய் பரவியது. இதனை சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில்
Distribution of drinking water by truck in Nellikuppam Municipality   நெல்லிக்குப்பம் நகராட்சியில் லாரியில் குடிநீர் வினியோகம்



நெல்லிக்குப்பம் : தினமலர் செய்தி எதிரொலி காரணமாக நெல்லிக்குப்பத்தில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் தினமும் காலை மாலை இரு வேளைகள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ராமு தெரு, கைலாசநாதர் கோவில் உட்பட பல பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்களுக்கு நோய் பரவியது. இதனை சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் தோண்டி குடிநீர் குழாய்களை சோதனை செய்தனர். ஆனால் எங்கு கழிவுநீர் கலக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் ஊழியர்கள் திணறினர். இதையடுத்து, குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டனர்.

இது குறித்தும் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் காரணமாக கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், 9வது வார்டு மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. குடிநீர் பிரச்னை தீரும் வரை லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X