நிர்வாக அவசர சட்டம் கெஜ்ரிவாலுக்கு உத்தவ் ஆதரவு

Added : மே 25, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
மும்பை, புதுடில்லி நிர்வாகம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முழு ஆதரவு அளிப்பதாக மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.புதுடில்லி நிர்வாகம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. 'சட்டம் - ஒழுங்கு, போலீஸ், நிலம் தவிர மற்ற அனைத்து நிர்வாகம் தொடர்பாக முடிவெடுக்க,
Uddhav supports Kejriwal on administrative emergency   நிர்வாக அவசர சட்டம் கெஜ்ரிவாலுக்கு உத்தவ் ஆதரவு



மும்பை, புதுடில்லி நிர்வாகம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முழு ஆதரவு அளிப்பதாக மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

புதுடில்லி நிர்வாகம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

'சட்டம் - ஒழுங்கு, போலீஸ், நிலம் தவிர மற்ற அனைத்து நிர்வாகம் தொடர்பாக முடிவெடுக்க, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பாக துணை நிலை கவர்னருக்கே அதிகாரம் அளிக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டத்தை அமல்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுடில்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 'இந்த அவசர சட்டம் தொடர்பான மசோதா பார்லிமென்டில் வரும் போது, ராஜ்யசபாவில் நிறைவேற்ற விட மாட்டோம்' என, அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

இதற்காக, பல எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். நேற்று முன்தினம் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்தார்.

இந்நிலையில், மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரும், உத்தவ் பால் தாக்கரே சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேயை அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்தார். இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தவ் தாக்கரே உறுதி அளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

sankar - Nellai,இந்தியா
25-மே-202308:22:05 IST Report Abuse
sankar இது தேச பாதுகாப்பு தொடர்பான விஷயம் - இதில் கோர்ட் ஒன்றும் சொல்லாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X