'தமிழ்மொழி இந்தியர்களின் மொழி' - டில்லி திரும்பிய பிரதமர் மோடி பெருமை
'தமிழ்மொழி இந்தியர்களின் மொழி' - டில்லி திரும்பிய பிரதமர் மோடி பெருமை

'தமிழ்மொழி இந்தியர்களின் மொழி' - டில்லி திரும்பிய பிரதமர் மோடி பெருமை

Updated : மே 25, 2023 | Added : மே 25, 2023 | கருத்துகள் (45) | |
Advertisement
புதுடில்லி: அரசு முறைப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிலையில் இந்தியா வந்து சேர்ந்தார். கிழக்காசிய நாடான ஜப்பான், பசிபிக் தீவு நாடுகளான பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.ஜப்பானில் நடந்த, 'ஜி - 7' மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பங்கேற்றார். பின் ஆஸ்திரேலியா சென்ற
Prime Minister Modi came to India  'தமிழ்மொழி இந்தியர்களின் மொழி' - டில்லி திரும்பிய பிரதமர் மோடி பெருமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: அரசு முறைப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிலையில் இந்தியா வந்து சேர்ந்தார்.

கிழக்காசிய நாடான ஜப்பான், பசிபிக் தீவு நாடுகளான பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.


ஜப்பானில் நடந்த, 'ஜி - 7' மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பங்கேற்றார். பின் ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, சிட்னியில் மிக பிரமாண்ட விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றினார். பயணத்தை நிறைவு செய்த நிலையில், நேற்று(மே 24) மாலை இந்தியா புறப்பட்டார். இன்று காலையில் வந்து சேர்ந்த பிரதமரை டில்லியில் மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் வரவேற்றனர்.


தொடர்ந்து பாஜ சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:



நாட்டின் நலனே இலக்கு


ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சென்ற போது உலக தலைவர்கள் பலரும் என்னை நேரில் சந்தித்து பேசியதை நினைந்து மகிழ்கிறேன். ஜி-20 மாநாடு குறித்தும் அனைவரும் பாராட்டி பேசினர். இது அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்த வெற்றி. இந்த சந்திப்பில் எனது முழு நேரத்தையும் இந்தியாவின் பெருமைக்காகவே நாட்டின் நலனுக்காக செலவழித்தேன். கோவிட் காலத்தில் இந்தியா எடுத்த முயற்சிகள் மற்றும் தடுப்பூசியை பலரும் பாராட்டினர். இந்தியா புத்தர் ,காந்தி பிறந்த மண். நாம் எதிரிகளுக்காகவும் கவலைப்படுகிறோம். ஏனெனில் நாம் இரக்கம் கொண்டவர்கள்.


ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில், அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கலந்து கொண்டார். அவர் மட்டுமல்லாமல், அந்நாட்டு முன்னாள் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்களும் , அவர்கள் நாட்டின் நலனுக்காக கலந்து கொண்டனர்.


உலகமே இந்தியாவை உற்று நோக்கி கவனிக்கிறது. இந்தியாவின் பெருமையை நினைந்து பார்க்கிறது. இந்திய கலாசாரத்தை உலகம் போற்றுகிறது.என்பதை இந்த வெளிநாட்டு பயணத்தில் உணர முடிந்தது.


திருக்குறள் வெளியீடு

பப்புவா நியூ கினியா நாட்டில், அந்நாட்டு மொழியில் பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டேன். தமிழ் மொழி நமது மொழி, உலகில் சிறந்த, மிகப்பழமையான மொழி. தமிழ்மொழி இந்தியர்களின் மொழி. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (45)

Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
25-மே-202321:58:01 IST Report Abuse
Palanisamy T தமிழ் இந்தியர்களின் மொழியென்றால் திருக்குறளை இந்திய நாட்டின் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்கலாமே அனைத்து இந்தியர்களும் அவரவர் தாய்மொழியில் தானே திருக்குறளை படிப்பார்கள். இப்படி சொன்னால் தமிழர்கள் பாஜக வை ஆதரிப்பார்கள், பாஜக நாளை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்குமென்ற நம்பிக்கைதான். நீங்கள் சமஸ்கிருத மொழிக்கு கொடுக்கும் அதேமுக்கியத்துவத்தை மரியாதையை கொஞ்சம் தமிழுக்கும் கொடுங்கள். சமஸ்க்ருத மொழி இந்தோ ஆரிய இனத்தை சேர்ந்த மொழி. தமிழ் திராவிட இனத்தை சேர்ந்தவை. அப்போதுதான் உங்கள் சொல்லிலும் உண்மையுள்ள தென்று மக்கள் நம்புவார்கள்.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
25-மே-202321:40:08 IST Report Abuse
Matt P இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளும் இந்தியர்களுக்கான மொழிகள் தான்.இந்திய மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தானே. பாகிஸ்தானில் பேசப்படும் உருதுவும் இந்தியாவில் தோன்றியது தான். பங்களாதேஷில் பேசப்படும் பெங்காலியம் இந்திய மொழி தான் நேபாளி மொழியும் இந்திய மொழி தோற்றம் தான்.இலங்கையில் பேசப்படும் சிங்களமும் இந்திய கலப்பு மொழி தான். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தமிழ் தோன்றியது என்றால் மொழியின் பிறப்பிடமே இந்தியா தான்.ஆசிய மொழிகளில் எல்லாம் இந்திய வார்த்தைகள் உள்ளது என்றால், இங்கிருந்து தான் மொழி ஆசிய நாடுகளுக்கு மொழி பயணம் செய்திருக்கிறது என்று நினைக்க தோன்றுகிறது.
Rate this:
Cancel
25-மே-202321:26:33 IST Report Abuse
முருகன் இதனை வரும் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் சொன்னால் நலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X