‛மக்கள் மன்னிக்க மாட்டார்கள்': எதிர்க்கட்சிகளுக்கு தே.ஜ., கண்டனம்
‛மக்கள் மன்னிக்க மாட்டார்கள்': எதிர்க்கட்சிகளுக்கு தே.ஜ., கண்டனம்

‛மக்கள் மன்னிக்க மாட்டார்கள்': எதிர்க்கட்சிகளுக்கு தே.ஜ., கண்டனம்

Added : மே 25, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: பார்லிமென்ட் புது கட்டட திறப்பு விழாவை புறக்கணித்து, ஜனநாயகத்திற்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவமரியாதை செய்தால், அதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என எதிர்க்கட்சிகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக 14 கட்சிகள் அடங்கிய தே.ஜ., கூட்டணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
Oppn boycotting Parl building inauguration blatant affront to democratic, constitutional values: NDA‛மக்கள் மன்னிக்க மாட்டார்கள்': எதிர்க்கட்சிகளுக்கு தே.ஜ., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பார்லிமென்ட் புது கட்டட திறப்பு விழாவை புறக்கணித்து, ஜனநாயகத்திற்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவமரியாதை செய்தால், அதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என எதிர்க்கட்சிகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக 14 கட்சிகள் அடங்கிய தே.ஜ., கூட்டணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பார்லிமென்ட் புது கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்வது இல்லை என்ற தங்களின் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாறாக தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, ஜனநாயகத்திற்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தினால், அதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை வரலாற்றில் எதிரொலிக்கும், தனி மனித அரசியலை லாபத்தை பற்றி சிந்திக்காமல், நாட்டை பற்றி எண்ண வேண்டும்.


பார்லிமென்ட், இந்திய ஜனநாயகத்தின் துடிப்புமிக்க இதயமாக உள்ளது. குடிமக்களின் வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்படுத்தும் வகையிலான கொள்கை முடிவுகள் எடுக்கும் முக்கிய மையமாகவும் பார்லிமென்ட் உள்ளது. இந்த அமைப்பு மீதான எதிர்க்கட்சிகளின் தாக்குதல், ஜனநாயகத்திற்கு செய்யும் அவமரியாதையை காட்டுகிறது.


ஜனாதிபதி தேர்தலின் போது, திரவுபதி முர்முவுக்கு எதிராக வேட்பாளரை களமிறக்கி அவரை அவமரியாதை செய்ததுடன், புதிய கீழ்த்தரமான அரசியலிலும் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டன. தேர்தலில், அவரது வேட்புமனுவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அவரை அவமானபடுத்தியதுடன் மட்டுமல்லாமல், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை நேரடியாக அவமரியாதை செய்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (9)

25-மே-202321:20:11 IST Report Abuse
ராஜ்குமார் ராகுல் அண்ணாச்சி உள்ள வர முடியாது. இப்பொழுது அவர் ஒரு பாராளுமன்ற உறுபினர் இல்லை. அதனால் அசுர வேகத்தில் பிஜெபி முடித்து காட்டியதை ஏற்று கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு காரணம் காட்டி வராமல் உள்ளார்கள். நாட்டுக்கு எந்த இழப்பும் இல்லை
Rate this:
Cancel
25-மே-202318:58:49 IST Report Abuse
ஆரூர் ரங் புதுமனை புகுவிழாவில் ஆமைகள் பூனைகள் குறுக்கே வராமலிருப்பதே🤔 நல்லது.
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
25-மே-202317:30:51 IST Report Abuse
THANGARAJ ஜனாதிபதி தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டி போடுவது வேறு, ஜனாதிபதியை புறக்கணிப்பது வேறு என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத பாஜக.
Rate this:
25-மே-202318:57:08 IST Report Abuse
ஆரூர் ரங்வாக்கு சேகரிக்க வந்த மூர்மு அவர்களை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கக் கூட மறுத்து கதவை🤥 சாத்தியதற்கு சாதீய எண்ணமும் பெண் என்பதாலும்தானே? இனி சமத்துவம் சமூகநீதி பற்றி திராவிஷ ஆட்கள் பேசக்கூடாது....
Rate this:
25-மே-202321:24:22 IST Report Abuse
ராஜ்குமார் ஜனாதிபதி யை அவமதிக்கும் செயல் அல்ல. அவரால் பிரதமர் ஆக நியமிக்கப்பட்ட ஒருவர் திறக்கிறார் என்பதில் பெருமை கொள்ள வேண்டும். நம் நாட்டின் முறையே அது தான். அறிந்தவர் அறிந்து கொள்ளலாம் அறியாதவர் அப்படியே இருக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X