அறிவியலின் பிறப்பிடமே வேதங்கள் தான்: இஸ்ரோ தலைவர்

Added : மே 25, 2023 | கருத்துகள் (13) | |
Advertisement
உஜ்ஜயினி: ''கணிதத்தின் அல்ஜீப்ரா, ஸ்கொயர் ரூட்ஸ், நேரம் தொடர்பான கணக்குகள், கட்டுமானக் கலை, பிரபஞ்சத்தின் கட்டமைப்பு, விமான அறிவியல், உலோக அறிவியல் எனப் பலவற்றுக்கும் வேதங்களே முன்னோடி'' என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். இவை, அரபு நாடுகள் வாயிலாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று, மேற்குலக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக கொடுக்கப்பட்டதாகவும்
ISRO Chief Says Scientific Discoveries Were in the Vedas, Later Repackaged As Western Conceptsஅறிவியலின் பிறப்பிடமே வேதங்கள் தான்: இஸ்ரோ தலைவர்

உஜ்ஜயினி: ''கணிதத்தின் அல்ஜீப்ரா, ஸ்கொயர் ரூட்ஸ், நேரம் தொடர்பான கணக்குகள், கட்டுமானக் கலை, பிரபஞ்சத்தின் கட்டமைப்பு, விமான அறிவியல், உலோக அறிவியல் எனப் பலவற்றுக்கும் வேதங்களே முன்னோடி'' என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். இவை, அரபு நாடுகள் வாயிலாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று, மேற்குலக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.


ம.பி., மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகரிஷி பானினி சமஸ்கிருத மற்றும் வேதிக் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடமே வேதங்கள் தான். ஆனால், மேற்குலக படைப்புகள் போல் அவை வேறு போர்வையில் கொடுக்கப்பட்டுள்ளன. கணிதத்தின் அல்ஜீப்ரா, ஸ்கொயர் ரூட்ஸ், நேரம் தொடர்பான கணக்குகள், கட்டுமானக் கலை, பிரபஞ்சத்தின் கட்டமைப்பு, விமான அறிவியல் , உலோக அறிவியல் எனப் பலவற்றிலும் வேதங்களே முன்னோடியாக திகழ்ந்தன.


ஆரம்ப காலத்தில் சமஸ்கிருத மொழிக்கு பேச்சு வழக்கு மட்டுமே இருந்ததால், அதில் சொல்லப்பட்ட அறிவியல் அபகரிக்கப்பட்டு, மேற்குலகின் தத்துவங்கள் போல் கொடுக்கப்பட்டு உள்ளன. பின்னர் தேவநாகிரி எழுத்துரு வந்த பின்னர் சமஸ்கிருத அறிவு செழித்தோங்கியது.


பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் சமஸ்கிருதத்தை அதிகம் விரும்புகிறார்கள். இது கணினிகளின் மொழிக்கு ஏற்றது. செயற்கை நுண்ணறிவு படித்தவர்கள் சமஸ்கிருதத்தை கற்றுக்கொள்கிறார்கள். கணினியில் சமஸ்கிருதத்தை பயன்படுத்துவது குறித்து அதிக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.



சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்திய இலக்கியங்கள் வளமானவை. வானியல், மருத்துவம், அறிவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் வானூர்தி அறிவியல் ஆகியவற்றில் கண்டுபிடிப்புகள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. ஆனால், அவை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. ஆய்வு செய்யவில்லை. சமஸ்கிருதத்தில் கலாசாரம், ஆன்மிகம் மற்றும் அறிவியல் படிப்பு என்று எந்தப் பிரிவினையும் இல்லை. இவ்வாறு சோம்நாத் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

26-மே-202309:36:55 IST Report Abuse
சண்முகம் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.....
Rate this:
Cancel
naadodi - Dallas,யூ.எஸ்.ஏ
26-மே-202306:10:28 IST Report Abuse
naadodi சுஸ்ருத சம்ஹிதை skin grafting பற்றி விலாவாரியாக சொல்கிறது. வைமானிக சாஸ்திரம் aerodynamics plus bernoullis principle பற்றி தெளிவாக உரைக்கிறது. ஸ்ரீமத் பாகவதம் , பூமி உருண்டை என்று பல இடங்களில் கூறுகின்றது. முயற்சி செய்யாதவர் இழி குரல் விடுப்பர்.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
25-மே-202322:11:31 IST Report Abuse
sridhar ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உலோகங்களை அவற்றின் தாதுவிலிருந்து பிரித்து உலோகம் எடுத்து உருக்கி ஐந்து உலோகங்களை கலந்து பல சிற்பங்களை உருவாக்கி உள்ளார்கள் , இதற்கு இரசாயன அறிவு முக்கியம். அதே போல பஞ்சாங்கத்தில் அந்தந்த ஆண்டுகளில் நிகழும் சூரிய சந்திர கிரஹணங்கள் துல்லியமாக குறித்தார்கள் . இதற்கு கிரஹங்களின் சுற்று வட்டங்கள் பற்றி அறிவு வேண்டும். இன்னும் எவ்வளவோ . ஆனால் ஐரோப்பியன் பதினாறாம் நூற்றாண்டில் கலீலியோ பூமி உருண்டை , அது சூரியனை சுற்றி வருகிறது என்று சொன்ன போது அது கிறிஸ்துவ மத நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி அவரை கைது செய்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X