கமுதி : கமுதி அருகே சேர்ந்தகோட்டை கிராமத்தில் எஸ்.ஆர்.எம். கபடி குழு சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் ப்ரோ கபடி விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. முடிவில் சாமிபட்டி அணி முதல் பரிசு, சேர்ந்தகோட்டை எஸ்.ஆர்.எம்., பி அணி இரண்டாம் பரிசு, சேர்ந்தகோட்டை எஸ்.ஆர்.எம்., ஏ அணி மூன்றாம் பரிசு, ஆலங்குளம் அணி நான்காம் பரிசும் பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு சார்பு நீதிபதி ஜெய்சங்கர் பரிசுகள், கோப்பைகளை வழங்கினார். ஏற்பாடுகளை சேர்ந்தகோட்டை இளைஞர் நற்பணி மன்றம் செய்தனர்.