செங்கோலில் நந்தி சிலை: திருமாவளவன் எதிர்ப்பு
செங்கோலில் நந்தி சிலை: திருமாவளவன் எதிர்ப்பு

செங்கோலில் நந்தி சிலை: திருமாவளவன் எதிர்ப்பு

Added : மே 26, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
“செங்கோல் என்பது மதச்சார்பற்றது. ஆனால் பார்லிமென்ட் திறப்பு நிகழ்ச்சியில் வழங்கவுள்ள செங்கோலில் நந்தி சிலை உள்ளது. இது மத சின்னமாக உள்ளதால் அதை எதிர்க்கிறோம்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:பார்லிமென்ட் புதிய கட்டடத் திறப்பு விழாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி புறக்கணிக்கப்பட்டுள்ளது ஜனநாயக மாண்புகளுக்கு
Nandi statue on scepter Thirumavalavan protest   செங்கோலில் நந்தி சிலை: திருமாவளவன் எதிர்ப்பு

“செங்கோல் என்பது மதச்சார்பற்றது. ஆனால் பார்லிமென்ட் திறப்பு நிகழ்ச்சியில் வழங்கவுள்ள செங்கோலில் நந்தி சிலை உள்ளது. இது மத சின்னமாக உள்ளதால் அதை எதிர்க்கிறோம்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது:

பார்லிமென்ட் புதிய கட்டடத் திறப்பு விழாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி புறக்கணிக்கப்பட்டுள்ளது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது. காங்., உட்பட 18 கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்கவுள்ளன. ஆர்.எஸ்.எஸ்.,ஐ சேர்ந்த சாவர்கர் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் மே 28 ல் திறப்பு விழா நடப்பதை கருப்பு நாளாக அனுசரித்து கருப்பு கொடியேற்ற உள்ளோம்.

'ஆந்திரா, சட்டீஸ்கர் தலைமை செயலகத்தை முதல்வர் திறந்தனர், பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் திறப்பதில் தவறில்லை' என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகிறார். விழாவிற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி இருவரும் முதலில் அழைக்கப்பட்டனரா என அவர் பதில் அளிப்பாரா.

செங்கோல் என்பது மதச்சார்பற்றது. ஆனால் இந்நிகழ்ச்சியில் வழங்கவுள்ள செங்கோலில் நந்தி சிலை உள்ளது.

இது மத சின்னமாக உள்ளதால் அதை எதிர்க்கிறோம்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் மது ஒழிப்பை தி.மு.க., செயல்படுத்த வேண்டும். நாடுமுழுவதும் மதுவிலக்கை வலியுறுத்தி ஜூனில் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்துவோம். தி.மு.க., - காங்., கூட்டணியில் தான் வி.சி.க., தொடரும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (11)

Narayanan - chennai,இந்தியா
01-ஜூன்-202315:46:26 IST Report Abuse
Narayanan இந்த நந்தி சின்னம் பொறுத்தப்பட்டது ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பத்தியேழு . அதை சிதைக்காமல் அப்படியே வைத்திருக்கிறார்கள் . நம் முன்னோர்கள் வழிபின்பற்றி நாம் நடக்கவேண்டும் .
Rate this:
Cancel
Jayaraman Ramaswamy - Chennai,இந்தியா
01-ஜூன்-202311:12:23 IST Report Abuse
Jayaraman Ramaswamy இதை ஏன் நந்தி சிலை, இந்து மத கடவுள் என்று பார்க்கவேண்டும். ஏன் இதை இவர்களின் ஜல்லிக்கட்டு மாடு என்று பார்க்க வேண்டியதுதானே. எங்கிருந்து மதம் வந்தது. அசோகா ஸ்தூபியில் உள்ள சிங்கம் அம்பாளின் வாஹனம் எனவே அதுவும் மாற்றப்பட வேண்டுமோ எங்கும் அரசியல் எதிலும் அரசியல். திடீரென்று செங்கோல் வந்தது அதை வைத்து எல்லோரும் அரசியல் செய்கிறார்கள்.
Rate this:
Cancel
Raj S - North Carolina,யூ.எஸ்.ஏ
30-மே-202323:46:05 IST Report Abuse
Raj S ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்... பூசாத மாதிரியும் இருக்கணும்... என்ன பண்றது சோத்துக்கு சிங்கி அடிக்கணுமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X