அனுப்பர்பாளையம்,;குடிநீர் தொட்டி கட்ட, 12.36 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, பூமி பூஜை நடைபெற்றது.
திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி, பசுமை நகரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்ட, 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் 12.36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது. திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ விஜயகுமார், பங்கேற்று பணியை துவக்கி வைத்தார்.
மாவட்ட கவுன்சிலர் கண்ணம்மாள், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யா மஹராஜ், ஊராட்சி தலைவர் முருகேசன், வள்ளி புரம் கூட்டுறவு சங்க தலைவர் துரை உட்பட பலர் பங்கேற்றனர்.