கடன் வழங்கும் முகாம்

Added : மே 27, 2023 | |
Advertisement
மேலுார் : மேலுார் வண்ணாம்பாறைபட்டியில் பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்கும் முகாமில் மகளிர் சுயஉதவிக் குழுவினர், பொதுமக்களுக்கு ரூ.2-கோடியே 88 லட்சத்து 17 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது.துணை பொது மேலாளர் ஹரிணி தலைமை வகித்தார். மகளிர் திட்ட உதவி இயக்குநர்கள் காளிதாஸ், மரியாமதேலம்மாள் பேசினர். மேலுார் பகுதியின் 26 மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு தலா ரூ. 10 லட்சம் கடன் வழங்கப்பட்டது. கறவை



மேலுார் : மேலுார் வண்ணாம்பாறைபட்டியில் பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்கும் முகாமில் மகளிர் சுயஉதவிக் குழுவினர், பொதுமக்களுக்கு ரூ.2-கோடியே 88 லட்சத்து 17 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது.

துணை பொது மேலாளர் ஹரிணி தலைமை வகித்தார். மகளிர் திட்ட உதவி இயக்குநர்கள் காளிதாஸ், மரியாமதேலம்மாள் பேசினர். மேலுார் பகுதியின் 26 மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு தலா ரூ. 10 லட்சம் கடன் வழங்கப்பட்டது. கறவை மாடு, வேளாண் கருவிகள் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ரூ. 38 லட்சத்து 17 ஆயிரம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை முதன்மை மேலாளர்கள் ராம்பிரசாத், சரவணன் செய்திருந்தனர். மாணவர்களின் கலை, சிலம்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவி பூமாரி, சக்தி சர்க்கரை ஆலை மேலாளர் உத்தண்டி, கிளை மேலாளர்கள் மாரியப்பன், குணவதி, வருண்குமார், வட்டார இயக்க மேலாளர் ராமு, ஒருங்கிணைப்பாளர்கள் ராதா, சண்முகபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X