தட்டுப்பாடின்றி தக்காளி,  வெங்காயம் கிடைக்க  தோட்டக்கலைத் துறை திட்டம்
தட்டுப்பாடின்றி தக்காளி, வெங்காயம் கிடைக்க தோட்டக்கலைத் துறை திட்டம்

தட்டுப்பாடின்றி தக்காளி, வெங்காயம் கிடைக்க தோட்டக்கலைத் துறை திட்டம்

Updated : மே 28, 2023 | Added : மே 28, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை-சிறிய வெங்காயம் மற்றும் தக்காளி தட்டுப்பாடின்றி கிடைக்க, 48 கோடி ரூபாய் செலவிட, தோட்டக்கலைத் துறை திட்டமிட்டுள்ளது. பெரம்பலுார், நாமக்கல், சேலம், துாத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சிறிய வெங்காயம் சாகுபடி நடக்கிறது.கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-சிறிய வெங்காயம் மற்றும் தக்காளி தட்டுப்பாடின்றி கிடைக்க, 48 கோடி ரூபாய் செலவிட, தோட்டக்கலைத் துறை திட்டமிட்டுள்ளது.



latest tamil news


பெரம்பலுார், நாமக்கல், சேலம், துாத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சிறிய வெங்காயம் சாகுபடி நடக்கிறது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால், வெளி மாநிலங்களில் இருந்து, வெங்காயம் மற்றும் தக்காளி எடுத்து வரப்படுகிறது.

அங்கு விளைச்சல் குறையும் காலங்களில், தமிழகத்தில் வெங்காயம், தக்காளி விலை உயர்கிறது.

எனவே, ஆண்டு முழுதும் சிறிய வெங்காயம் மற்றும் தக்காளி தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கான புதிய முயற்சியை, தோட்டக்கலைத் துறையினர் துவக்கியுள்ளனர்.

இதற்காக, வெங்காயம் சாகுபடி நடக்கும் மாவட்டங்களில் விதைப்பு இயந்திரங்கள், சேமிப்பு கட்டமைப்புகள், அறுவடை இயந்திரங்கள், வெங்காயத் தாள் பிரித்தெடுக்கும் கருவி ஆகியவை, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.


latest tamil news


இதற்காக, 29 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இதன் வாயிலாக சந்தைக்கு வெங்காய வரத்து நிலைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, தக்காளி உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களில், விதைப்பு முதல் அறுவடை வரையும், அவற்றை மதிப்பு கூட்டவும், பல்வேறு உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

இதற்காக, 19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பருவம் இல்லாத காலங்களிலும், தக்காளி நடவு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஆண்டு முழுதும் தக்காளி கிடைக்க வாய்ப்புள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (6)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
28-மே-202321:01:06 IST Report Abuse
Ramesh Sargam தமிழகத்தில் தட்டுப்பாடின்றி தக்காளி, வெங்காயம் கிடைக்குமோ, கிடைக்காதோ, ஆனால், தங்கு தடையின்றி டாஸ்மாக் சரக்கு கிடைக்கும்.
Rate this:
Cancel
28-மே-202314:29:42 IST Report Abuse
அநாமதேயம் இது அடிப்படை தெரியாத அதிகாரிகளின் திட்டம். விவசாயிகள் தான் இந்த விலை வீழ்ச்சியில் பாதிக்கப்படுகிறார்கள். வெங்காயம் அளவுக்கு அதிகமாகவே உற்பத்தி ஆகிறது கிலோ பெரிய வெங்காயம் 20 10 க்கும் கூட விவசாயிகள் விற்கும் அவல நிலை தான் உள்ளது. அந்த 20 வெங்காயம் 200 முதல் 300 வரை விற்கிறார்கள் விவசாயிகள். தக்காளியும் அப்படியே 20 ஐந்து ₹ விற்கும் விவசாயி உற்பத்தி நிலைகூட கிடைக்காமல் அறுவடை கூலிக்கு கூட வருமானம் இல்லாமல் உள்ள நிலையில் இதை நீண்ட காலம் சேமிக்க வழிகள் உள்ளதா என்று தான் கண்டு பிடிக்க வேண்டும். காலம் தவறி சீசன் இல்லாத சமயங்களில் இது பயிரிடும் போது நோய் தாக்கம் குறைந்த விலைச்சல் ஆகிய காரணங்களால் அதிக உரம் மற்றும் பூச்சிகொல்லி உபயோகிக்கும் நிலைவரும். பூச்சி கொல்லிகள் மருந்து தெளித்தால் மக்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் இதற்கு தீர்வு ஏற்ற இறக்கத்திற்கேற்பவும். சீதோஷ்ண நிலையில் விலையும் காய்கறிகள் அளவோடு உண்ண வேண்டும்.
Rate this:
Cancel
R SUDARSAN -  ( Posted via: Dinamalar Android App )
28-மே-202312:08:59 IST Report Abuse
R SUDARSAN VERY GOOD INITIATIVE. AFTER SO MANY YEARS
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X