நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல்; யார் இந்த உம்மிடி எத்திராஜலு? சமூக வலைதளங்களில் இன்று..!
நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல்; யார் இந்த உம்மிடி எத்திராஜலு? சமூக வலைதளங்களில் இன்று..!

நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல்; யார் இந்த உம்மிடி எத்திராஜலு? சமூக வலைதளங்களில் இன்று..!

Updated : மே 28, 2023 | Added : மே 28, 2023 | கருத்துகள் (15) | |
Advertisement
இன்று 976 கோடி ரூபாய் செலவில் உருவாகிய இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது. கடந்த இரண்டாண்டுகளாக கட்டுமானத்தில் இருந்த இந்த நாடாளுமன்றக் கட்டடம் தற்போது நிறைவு பெற்று பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்தின்போது பாரதத்தின் முதல் பிரதமர் நேருவிடம் ஒப்படைக்கப்பட்ட செங்கோல் பிரதமர் மோடியால் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இந்த
Scepter established in Parliament; Who is this Ummidi Ethirajalu? Today on social media..!  நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல்; யார் இந்த உம்மிடி எத்திராஜலு? சமூக வலைதளங்களில் இன்று..!

இன்று 976 கோடி ரூபாய் செலவில் உருவாகிய இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது. கடந்த இரண்டாண்டுகளாக கட்டுமானத்தில் இருந்த இந்த நாடாளுமன்றக் கட்டடம் தற்போது நிறைவு பெற்று பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்தின்போது பாரதத்தின் முதல் பிரதமர் நேருவிடம் ஒப்படைக்கப்பட்ட செங்கோல் பிரதமர் மோடியால் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இந்த செங்கோலை உருவாக்கிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 97 வயதான பொற்கொல்லர் உம்மிடி எத்திராஜலு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். அவருக்கு நாடாளுமன்ற திறப்பு விழாவில் மரியாதை செய்யப்பட்டது. இவர் செங்கோல் குறித்துக் கூறும் அரிய தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

உம்மிடி பங்காரு நகைக்கடை கலைஞர்களால் உருவாக்கப்பட்டது இந்த செங்கோல். உம்மிடி சுதாகர், உம்மிடி எத்திராஜலு உள்ளிட்டோர் தங்கள் பதின்பருவத்தில் இந்த செங்கோலை ஒரு மாத காலத்தில் உருவாக்கினர். சுதந்திரம் பெற்றதற்கான அடையாளமாக ஆதீனங்கள் பிரதமர் நேருவிடம் இந்த செங்கோலை ஒப்படைத்துள்ளனர்.


latest tamil news


செங்கோல் வெள்ளியால் செய்யப்பட்டு அதன்மீது தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இதனை உருவாக்க 1947 ஆம் ஆண்டில் 15 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக இந்த செங்கோல் எங்கு வைக்கப்பட்டு இருந்தது என்றே தங்களுக்குத் தெரியாது இருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அதனை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைத்து அதற்கு மரியாதை செய்துள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். இது தங்களது உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் எனக் கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (15)

Ramalingam Shanmugam - mysore,இந்தியா
01-ஜூன்-202310:41:28 IST Report Abuse
Ramalingam Shanmugam ஓங்கோலுக்கு இதன் அருமை புரியாது
Rate this:
Cancel
sankar - chennai,இந்தியா
31-மே-202308:05:39 IST Report Abuse
sankar தேவ சிட்பி இன்னும் நூறாண்டு வாழ்க
Rate this:
Cancel
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
28-மே-202321:10:05 IST Report Abuse
Veeramani Shankar The evident is itself Sizapathigaram, in which the Sengol got bend. After his dead, (because of his injustice), the sengol automatically came back in it's original position
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X