அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல்: வருமான வரித்துறை இயக்குனர் புகார்
அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல்: வருமான வரித்துறை இயக்குனர் புகார்

அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல்: வருமான வரித்துறை இயக்குனர் புகார்

Added : மே 28, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
கரூர்: ''கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது, திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்,'' என, வருமான வரித்துறை இயக்குனர் சிவசங்கரன் தெரிவித்தார்.கரூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை அழைத்துச் செல்ல நேற்று வந்த அவர் கூறியதாவது:கரூரில் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது திட்டமிட்டு
Director of Income Tax complains about planned attack on officials  அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல்: வருமான வரித்துறை இயக்குனர் புகார்

கரூர்: ''கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது, திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்,'' என, வருமான வரித்துறை இயக்குனர் சிவசங்கரன் தெரிவித்தார்.

கரூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை அழைத்துச் செல்ல நேற்று வந்த அவர் கூறியதாவது:

கரூரில் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் காயமடைந்த நான்கு பேர், 'டிஸ்சார்ஜ்' ஆகி விட்டனர்.

தாக்குதலில் இரண்டு பேருக்கு, எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது எட்டு பேரை கைது செய்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

தாக்குதல் நடத்திய அனைத்து நபர்கள் மீதும், நடவடிக்கை எடுக்கச் சொல்லி போலீசுக்கு புகார் கொடுப்போம். தொடர்ந்து கரூரில் சோதனை நடந்து வருகிறது.

சோதனையின் போது பிடிபட்ட பணம், ஆவணங்கள் குறித்து தற்போது சொல்ல முடியாது. திட்டமிடப்பட்ட அனைத்து இடங்களிலும், சோதனை முடிந்த பிறகு, இறுதியாக சென்னை வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல் தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (4)

சீனி - Bangalore,இந்தியா
29-மே-202307:09:08 IST Report Abuse
சீனி அந்த ரெளடிகளின் ராஜ்ஜிமான கரூர் மாநகராச்சி நிர்வாகிகள் முழுதும் வருமான வரி ஊழியர்களுக்கு எதிராக கொலை முயற்சியில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளதால், மாநகராச்சியை கலைத்துவிட்டு புதிய தேர்தல் நடத்தவேண்டும்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
29-மே-202307:07:11 IST Report Abuse
சீனி தேசநலனுக்காக பாடுபடும் அரசு ஊழியர்களை தாக்கிய செந்தில் பாலாஜி மீது, கொலை வழக்கு பதிவு செய்து, பதவியை பறித்து திகார் சிறையில் அடைக்கவேண்டும். அவன் தம்பியையும் ஜாமீனில் வெளிவரமுடியாத குண்டர் சட்டத்த்தில் கைது செய்யப்பட வேண்டும். சக அரசு ஊழியருக்கு பாதுகாப்பு கொடுக்காததற்கும், துரிதமாக நடவடிக்கை எடுக்காத கரூர் எஸ்பி மீதும் துறை ரீதியாக வழக்கு பதியவேண்டும். மொத்தத்தில் 356க்கு எல்லா தகுதியையும் விடியல் வளர்த்துக் கொண்டுள்ளது. புதிய பார்லிமெண்ட்டில் முதல் அறிவிப்பே தமிழகத்துக்கு விடியலை தரவேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யும் வரை, எதிர்கட்சிகள் தமிழகம் தழுவிய முழு அடைப்பு, போராட்டம் அறிவிக்கவேண்டும்.
Rate this:
Cancel
venkatakrishna - Trichy,இந்தியா
29-மே-202306:47:11 IST Report Abuse
venkatakrishna அவர்கள் காசுக்காக எதையும் செய்வார்கள் என்று பாமர மக்களுக்கே தெரியும்போது விவரம் தெரிந்த நீங்கள் இப்படி பாதுகாப்பு இல்லாமல் வரலாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X