அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு அடிப்படை தகுதி போதாது: சென்னை ஐ-கோர்ட்
அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு அடிப்படை தகுதி போதாது: சென்னை ஐ-கோர்ட்

அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு அடிப்படை தகுதி போதாது: சென்னை ஐ-கோர்ட்

Updated : மே 29, 2023 | Added : மே 29, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : ''சிசு பாலின தேர்வு தடைச் சட்டத்தின்படி, அடிப்படை தகுதி பெற்றவர்களுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் செய்ய தகுதி இல்லை,'' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஓமியோபாதி மற்றும் யோகா போன்ற இந்திய மருத்துவ முறைகளான ஆயுஷ் மருத்துவ படிப்புகளை படித்து, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள்

சென்னை : ''சிசு பாலின தேர்வு தடைச் சட்டத்தின்படி, அடிப்படை தகுதி பெற்றவர்களுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் செய்ய தகுதி இல்லை,'' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஓமியோபாதி மற்றும் யோகா போன்ற இந்திய மருத்துவ முறைகளான ஆயுஷ் மருத்துவ படிப்புகளை படித்து, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள் தொடர்பான சான்றிதழ் முடித்த மருத்துவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு ஒலியியல் பரிசோதனைகள் செய்ய அனுமதிக்க, மத்திய- மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு ஆயுஷ் ஒலியியல் பரிசோதனையாளர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசரணைக்கு வந்தது.

விசாரித்த நீதிபதி, கருவில் இருக்கும் குழந்தை பெண் என்றால், குழந்தையை கருவிலேயே அழிக்க, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை முறை, துணை செல்கிறது.

இதை தடுக்க, 1994ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, சிசு பாலின தேர்வு தடை சட்டத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் மேற்கொள்ள, பல்வேறு சிறப்பு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த தகுதிகளை பெற்ற மருத்துவர்களுக்கு மட்டுமே இந்த பரிசோதனைகளை நடத்த தகுதி உள்ளது.

தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்களுக்கான சட்டம், 2018 பிரிவு 32ன்படி, இந்த சிறப்பு தகுதிகளை பெறாத மருத்துவர்கள், இச்சோதனைகளை நடத்த தகுதியில்லை.


latest tamil news


மனுதாரர் சங்க உறுப்பினர்கள், எக்ஸ்-ரே, இ.சி.ஜி., போன்ற அடிப்படை பயிற்சிகளை மட்டுமே பெற்றுள்ளனர்.எனவே, அவர்கள் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

Anantharaman Srinivasan - chennai,இந்தியா
30-மே-202300:07:16 IST Report Abuse
Anantharaman Srinivasan Super.. பேட்டைக்குபேட்டை கிளினிக் திறந்து Practice செய்ய முடியாது..
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
29-மே-202321:34:53 IST Report Abuse
Ram Nattil tharam athala pathalathuku sendrukondiruki
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X