'செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மனிதர்களைக் கொல்லும்..!'- எச்சரிக்கிறார் கூகுள் முன்னாள் சிஇஓ
'செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மனிதர்களைக் கொல்லும்..!'- எச்சரிக்கிறார் கூகுள் முன்னாள் சிஇஓ

'செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மனிதர்களைக் கொல்லும்..!'- எச்சரிக்கிறார் கூகுள் முன்னாள் சிஇஓ

Updated : மே 29, 2023 | Added : மே 29, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
கூகுள் முன்னாள் சிஇஓ எரிக் ஸ்கிமிட் கணினி மென்பொருள் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். கணினி மென்பொருள் நிறுவனமான கூகுள், தற்போது செயற்கை நுண்ணறிவுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளித்து வருகிறது. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுமூலம் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனிதர்களைக் கொல்ல பயன்படுத்தப்படலாம் என எரிக் ஸ்கிமிட் எச்சரித்துள்ளார். எலான் மஸ்க், ஆப்பிள்
Artificial intelligence will kill humans in the future..!- warns ex-Google CEO  'செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மனிதர்களைக் கொல்லும்..!'- எச்சரிக்கிறார் கூகுள் முன்னாள் சிஇஓ

கூகுள் முன்னாள் சிஇஓ எரிக் ஸ்கிமிட் கணினி மென்பொருள் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். கணினி மென்பொருள் நிறுவனமான கூகுள், தற்போது செயற்கை நுண்ணறிவுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளித்து வருகிறது. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுமூலம் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனிதர்களைக் கொல்ல பயன்படுத்தப்படலாம் என எரிக் ஸ்கிமிட் எச்சரித்துள்ளார். எலான் மஸ்க், ஆப்பிள் துணை நிறுவனர் ஸ்டீவ் ஓக்னியாக், விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் உள்ளிட்ட பலர் ஏற்கனவே இதுபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

மனிதர்கள் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள், இயந்திரங்களை எதிர்காலத்தில் ராணுவத்தில் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், செயற்கை நுண்ணறிவு குறித்த அளவுக்கதிகமான ஆராய்ச்சி ஆபத்தானது என கூறப்படுகிறது. எனவே செயற்கை நுண்ணறிவை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம் என பலர் கூறியுள்ளதை எரிக்-கும் உறுதிபடுத்தியுள்ளார்.


latest tamil news


எதிர்காலத்தில் பயோ வெப்பன் தயாரிக்க கணினி ஹேக்கர்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கொரோனா போன்று மனித இனத்துக்கு ஆபத்தான வைரஸை பரப்ப செயற்கை நுண்ணறிவு பயன்படலாம். எனவே இதுகுறித்த ஆய்வுக்கு கட்டுப்பாடு தேவை என உலக விஞ்ஞானிகள் பலரும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கணினிக்கு சிந்திக்கும் திறனை ஓர் அளவுக்கு மேல் அளிப்பது ஆபத்து, எனவே கணினி தானாகக் கற்றுக்கொள்ளும் மிஷின் லேர்னிங் முறைக்கு ஓர் கட்டுப்பாட்டை வைப்பது அவசியம் எனக் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

DVRR - Kolkata,இந்தியா
30-மே-202316:52:03 IST Report Abuse
DVRR இதில் ஒரு வெடிக்கை என்னவென்றால் AI - Artificial Intelligence - With Human intelligence we will develop software for Artificial Intelligence. இதிய செய்வது யார் மனிதன். ஒரு நாள் என்னாகும் சன்னி ஷியா அஹ்மெடியா......எல்லொரும் முஸ்லிம் ஆனால் இவனை அவன் கொல்லுவான் அவனை இவன் கொள்ளுவான் (உதாரணம் நான் கொல்லுவான் என்று டைப் செய்தால் அது கொள்ளுவான் என்று ஆகின்றது தினமலரில்) அதாவது ஒரு AI குரூப் இன்னொரு AI குரூப்பை ஒழிக்க முயற்சி செய்யும் சன்னி ஷியா மாதிரி அதில் இருவரும் அழிந்து போவார்கள் பிறகு மிஞ்சிப்போனது அந்த AI வெறும் AI ஒன்னும் செய்ய முடியாது அது தானாகவே மடிந்து விடும் மின்சாரம் software இல்லாமல். இது தான் நடக்கபோகின்றது
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-மே-202311:02:25 IST Report Abuse
g.s,rajan செயற்கை நுண்ணறிவு சமையல் செய்யுமா,விவசாயம் செய்யுமா ...???
Rate this:
Cancel
நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) எதுவும் பட்டால்தான் புத்திவரும் இந்த மக்களுக்கு. எதுவும் அளவுக்கு அதிகமானால் ஆபத்துதான். அறிவியலுக்கும் இது பொருந்தும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X