புதுடில்லி: மூன்று நாள் அரசு முறைப்பயணமாக கம்போடியா மன்னர் இன்று தலைநகர் டில்லி வந்திறங்கினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர். ஷிகாமோனியுடன் 27 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினரும் வருகை தந்தனர்.
இந்த பயணத்தின் போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை கம்போடிய மன்னர் சந்தித்து பேச உள்ளார்.
இந்திய - கம்போடியா இடையே கடந்த 1952-ம் ஆண்டு பரஸ்பரம் தூதரக ரீதியிலான நட்புறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் கடந்துவிட்டதையடுத்து 60 ஆண்டு இடைவெளிக்கு பின் முதன் முறையாக கம்போடிய மன்னர் நெரோதம் ஷிகாமோனி அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.