டி.எஸ்.பி., மீது நடவடிக்கை? லஞ்ச ஒழிப்பு போலீஸ் 'கப்சிப்'
டி.எஸ்.பி., மீது நடவடிக்கை? லஞ்ச ஒழிப்பு போலீஸ் 'கப்சிப்'

டி.எஸ்.பி., மீது நடவடிக்கை? லஞ்ச ஒழிப்பு போலீஸ் 'கப்சிப்'

Added : மே 30, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, டி.எஸ்.பி.,மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமி நாராயணன், 36; வேதநாராயணன், 36; ஜனார்த்தனன், 39.இவர்கள் உட்பட, 10 பேர் இயக்குனர்களாக இருந்து, ஐ.எப்.எஸ்., எனும் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
Action on DSP? Anti-corruption police Cupship   டி.எஸ்.பி., மீது நடவடிக்கை? லஞ்ச ஒழிப்பு போலீஸ் 'கப்சிப்'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, டி.எஸ்.பி.,மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமி நாராயணன், 36; வேதநாராயணன், 36; ஜனார்த்தனன், 39.இவர்கள் உட்பட, 10 பேர் இயக்குனர்களாக இருந்து, ஐ.எப்.எஸ்., எனும் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

இவர்கள் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, 2018 - 2022 ஜூலை வரை, 84 ஆயிரம் பேரிடம், 5,900 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, 21 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

முக்கிய ஏஜன்டுகளாக செயல்பட்ட, ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

லட்சுமி நாராயணன் உள்ளிட்ட நான்கு பேர் வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர். இவர்களை, விசாரணை அதிகாரியாக இருந்த, டி.எஸ்.பி.,கபிலன் தப்பிக்க விட்டுவிட்டதாகவும், அவருக்கு லஞ்சமாக, 5 கோடி ரூபாய் கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில், கபிலன், ஏப்ரலில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு பரிந்துரை செய்து இருப்பதாக, டி.ஜி.பி., சைலேந்திரபாபு அறிவித்தார்.

ஆனால், கபிலன் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்காமல், மவுனம் காக்கின்றனர். இது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

'லஞ்ச விவகாரத்தில் கபிலன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில், மேலும் சில அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் பற்றியும் விசாரித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) அருமை அருமை. குற்றவாளிகள் தப்பிப்பதும் ஏதுமறியா நல்லவர்கள் கஷ்டப்படுவதும் விடியலில் சகஜம்தானே. அனுபவியுங்கள் மக்களே.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
30-மே-202306:08:39 IST Report Abuse
raja மாடல் ஆட்சியில் விடியல் சூப்பரா இருக்கு என்று கேவலம் ருவா ரெண்டாயிரம், ஓசி குவாட்டெருக்கும் கோழி பிரியாணிக்கும் விலை போன தமிழன் சொல்றான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X