ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி?
ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி?

ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி?

Added : மே 30, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை, ஜூன் 5ல், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நடக்கும் கருணாநிதி நுாற்றாண்டு துவக்க விழாவிலும் அவர் பங்கேற்பதாக இருந்தது. இந்த நிலையில் ஜூன் 5ல் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார் என
President coming to Chennai on June 15?  ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி?

சென்னை: சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை, ஜூன் 5ல், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நடக்கும் கருணாநிதி நுாற்றாண்டு துவக்க விழாவிலும் அவர் பங்கேற்பதாக இருந்தது. இந்த நிலையில் ஜூன் 5ல் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார் என சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜனாதிபதியை வைத்து வேறு தேதியில் திறக்கலாமா அல்லது வேறு தலைவரை அழைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் கருணாநிதி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜூன் 5க்கு பதிலாக ஜூன் 15ம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (5)

Loganathan Kuttuva - Madurai,இந்தியா
30-மே-202316:43:56 IST Report Abuse
Loganathan Kuttuva சென்ற முறை ஜனாதிபதி தமிழகத்திற்கு வருகை புரிந்த பொழுது கவர்னர் தான் உடனிருந்தார் .
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
30-மே-202314:53:16 IST Report Abuse
r.sundaram கருணாநிதி பெயரில் இருக்கும் எதையும் திறக்க ஜனாதிபதி வரக்கூடாது, விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று ஒரு நீதிபதியால் குற்றம் சாட்டப்பட்டவர் கருணாநிதி. இந்த நிலையில் அவரது பெயரில் இருக்கும் எதையும் திறக்க ஜனாதிபதி வரக்கூடாது. அப்படி வந்தால் அதுஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அப்புறம் ஊழல் செய்வது ஒரு தகுதி என்று ஆகிவிடும். அப்படித்தானே ஆகியிருக்கிறது அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த திருமலையப்பன் பெயர் கொண்ட அவர் விஷயத்தில்.
Rate this:
Cancel
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
30-மே-202309:10:09 IST Report Abuse
rasaa நமது ஜனாதிபதி தேர்தலில் இவரை தேர்வுசெய்ய மறுத்தவர்கள் இப்பொழுது வருந்தி அழைப்பது ஏன்?
Rate this:
Mohan A Annamalai - Tiruvannamalai,இந்தியா
30-மே-202310:08:28 IST Report Abuse
Mohan A Annamalaiஅட ராசா.. இதுகூடவா புரியல உனக்கு.. அப்போ அவர் BJP யோட வேட்பாளர்.. இப்போ அவர் நாட்டோட ஜனாதிபதி....
Rate this:
MANI DELHI - Delhi,இந்தியா
30-மே-202311:33:05 IST Report Abuse
MANI DELHIமோடி எங்களுக்கு ஆகாது. கவர்னர் எங்களுக்கு ஆகாது. ஜனாதிபதி பழங்குடியினர். அது எங்கள் வோட்டுக்கு தேவை. அதனால் கூப்புடுறோம். அது சரி பார்லிமென்ட் திறக்க ஜனாதிபதி போகவில்லை. ஆஸ்பத்திரி திறக்கவா போறாங்க. என்னடா இது ஜனாதிபதிக்கு வந்த சோதனை. மதுரையில் வரும் எய்ம்ஸ் திறக்க போனாலும் ஒரு வரைமுறை உண்டு. திராவிட அலப்பறைகள் உள்ளவரை ஜனாதிபதி மாநில அழைப்புகளுக்கு முட்டு கொடுக்க தேவை இல்லை. வந்தால் பழங்குடியினர் இல்லையென்றால் பிஜேபி ஆதரவாளர் என்று தனக்கு சௌகரியமாக அறிக்கை விடுவாங்க.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X