கூலிப்படையாகும் மதுரை சிறுவர்கள்; போலீசார் அதிர்ச்சி
கூலிப்படையாகும் மதுரை சிறுவர்கள்; போலீசார் அதிர்ச்சி

கூலிப்படையாகும் மதுரை சிறுவர்கள்; போலீசார் அதிர்ச்சி

Added : மே 30, 2023 | கருத்துகள் (43) | |
Advertisement
மதுரை: மதுரையில், இரண்டு ஆண்டுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, 206 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நகரில், 1,685 சிறுவர்கள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.கடந்தாண்டு, 2,263 பேரிடம் நன்னடத்தை பிரமாண பத்திரம் பெறப்பட்டுள்ளது. நகரில் கடந்தாண்டு நடந்த, 740 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலும், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். இதில், பலர் கூலிப்படையாக இயங்கி
Madurai boys as mercenaries; The police were shocked  கூலிப்படையாகும் மதுரை சிறுவர்கள்; போலீசார் அதிர்ச்சி

மதுரை: மதுரையில், இரண்டு ஆண்டுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, 206 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நகரில், 1,685 சிறுவர்கள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.

கடந்தாண்டு, 2,263 பேரிடம் நன்னடத்தை பிரமாண பத்திரம் பெறப்பட்டுள்ளது. நகரில் கடந்தாண்டு நடந்த, 740 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலும், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். இதில், பலர் கூலிப்படையாக இயங்கி வருவது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


போலீசார் கூறியதாவது: ஆரம்பத்தில் கடை உரிமையாளர்களிடம் 'மாமூல்' கேட்டு மிரட்ட ஆரம்பித்து, ரவுடி தொழிலை துவங்கி, அடுத்தடுத்து வழிப்பறி, திருட்டு, வெட்டு, கொலையில் ஈடுபட்டு சிறை செல்கின்றனர்.


அங்குள்ளவர்களுடன் பழகி, ஜாமினில் வெளிவந்ததும் கூலிப்படையாக செயல்படுகின்றனர். தமிழகத்தின் பிற சிறைகளிலும், வெளிமாநில சிறைகளிலும் உள்ள மதுரை சிறுவர்கள் எண்ணிக்கை 50ஐ தாண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (43)

Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
30-மே-202319:18:45 IST Report Abuse
Rajagopal வாழ்க திராவிடம் வளர்க அராஜகம் ரவுடிகள் நடத்தும் ஆட்சியில் ரவுடிகள் வளர்வது ஆச்சரியமான விஷயம் இல்லை. தவிர வருகின்ற திராவிட சித்தாந்தத் திரைப்படங்கள் (வெற்றிமாறன், பா ரஞ்சித் போன்றவர்கள் உருவாக்கும் படங்கள்) வன்முறையை விவரமாக இளைஞர்களுக்கு போதிக்கின்றன. சிறைக்கைதிகளை ஏதோ கடவுள்களைப்போலக் காட்டி வளர்த்தால், வருகின்ற தலைமுறை குட்டிச்சுவராகத்தான் ஆகும்.
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
30-மே-202319:06:01 IST Report Abuse
mrsethuraman  பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு பரவ காரணம் அரசியல் வாதிகளும் அவர்களால் ஏற்பட்ட சமுதாய சீரழிவும் தான் .
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
30-மே-202318:11:09 IST Report Abuse
raja அப்புறம் கேடுகெட்ட விடியலின் மாடல் ஆட்சியில் ஆபிசரா ஆகவா முடியும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X