பதக்கங்களை வீசுவதாக  நாடகம் :  பிரிஜ் பூஷன் குற்றச்சாட்டு
பதக்கங்களை வீசுவதாக நாடகம் : பிரிஜ் பூஷன் குற்றச்சாட்டு

பதக்கங்களை வீசுவதாக நாடகம் : பிரிஜ் பூஷன் குற்றச்சாட்டு

Updated : மே 30, 2023 | Added : மே 30, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: கங்கை நிதியில் வீசப்போவதாக பதக்கங்களுடன் சென்ற மல்யுத்த வீரர்கள், நாடகம் நடத்தியுள்ளனர் என இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார்.இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கடந்த ஒரு மாதத்திற்கு மேல் டில்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர்,
Drama of throwing medals: Brij Bhushan accused  பதக்கங்களை வீசுவதாக  நாடகம் :  பிரிஜ் பூஷன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கங்கை நிதியில் வீசப்போவதாக பதக்கங்களுடன் சென்ற மல்யுத்த வீரர்கள், நாடகம் நடத்தியுள்ளனர் என இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கடந்த ஒரு மாதத்திற்கு மேல் டில்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தின் உச்சமாக இன்று தங்களின் பதக்கங்களை ஹரிதுவார் கங்கை நதியில் வீசி எறிய போவதாக அறிவித்து அங்கு ஒன்று கூடினர்.


latest tamil news


அப்போது விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயத் தலைமையிலான விவசாய அமைப்புகள் அவர்களுடன் சமரச பேச்சு நடத்தினர். 5 நாள் அவகாசம் கேட்டதையடுத்து பதக்கங்களை வீசி எறியும் போராட்டத்தை தள்ளி வைத்தனர்.


இது குறித்து பிரிஜ் பூஷன் அளித்த பேட்டியில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வீசி எறிய போவதாக முடிவு எடுத்தனர். அதனை ஏன் விவசாய சங்க தலைவரிடம் ஒப்படைத்தனர். எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. அவர்கள் திட்டமிட்டு நாடகம் அரங்கேற்றியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (7)

31-மே-202310:06:38 IST Report Abuse
ராஜா இந்திய நாட்டில் அரசியல் சாசனப்படி தான் எதுவும் நடக்கும். ராகுல் வின்சி மீதுகூட வழக்கு தீர்ப்பு வந்த பின் தான் அவர் பதவி நீதிமன்றத்தால் பறிக்கப்பட்டது. காரனம், யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை என்பது தான். செங்கோல் கூறும் அறமும் அது தான். போராடுபவர்கள் நோக்கம் நீதி வேண்டும் என்றால் பாஜக அல்லாத மாநிலங்களில் வழக்கு பதிவு செய்து ஆதாரங்கள் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருக்கலாம் தேவைபட்டால் கைதும் செய்திருக்கலாம். ஆனால், இவர்கள் நோக்கம் இந்திய அரசை, சட்டத்தை இழிவு செய்யும் நோக்கில் உள்ளது. இவர்கள் பின்னணியில் ராகுலை பதவியில் இருந்து தூக்கி எறிந்த சட்டத்தை இழிவு செய்யும், பழிவாங்கும் காங்கிரசின் சூழ்ச்சி இருக்கிறது. நீதிமன்றங்கள் இது போன்ற போக்கை இனியும் ஆதரிக்கக்கூடது. குற்றம் நிரூபிக்கப் படவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்களுக்கு, ஆதரித்வர்களுக்கு கடும் தண்டனையை கொடுக்க வேண்டும். அதனால் இன்னும் ஒருவர் இதுபோன்று தேவையில்லாமல் மலிவான அரசியலுக்கு வேண்டி நாட்டை இழிவுபடுத்தி போராட முன்வர மாட்டார்கள்.
Rate this:
Cancel
31-மே-202309:12:14 IST Report Abuse
முருகன் இவர்களுக்கு எதிராக யார் செயல் பட்டாலும் அவர்களை தேச துரோகி போல் நடத்துவார்கள் என்பதே உண்மை
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
31-மே-202306:21:50 IST Report Abuse
vadivelu ஏன் இப்போது உச்ச நீதி மன்றம் தலை இட்டு இதற்கான தீர்வை செய்ய கூடாது.அசிங்கமாக இருக்கே இந்த கூட்டம் செய்வது.போலீசுக்கும் போக மாட்டேன் , கோர்ட்டுக்கும் போக மாட்டேன் என்றால் என்ன பொருள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X