அதிவேகத்தில் சென்ற பைக் :லாரி அடியில் சிக்கி  இருவர் பலி
அதிவேகத்தில் சென்ற பைக் :லாரி அடியில் சிக்கி இருவர் பலி

அதிவேகத்தில் சென்ற பைக் :லாரி அடியில் சிக்கி இருவர் பலி

Added : மே 30, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
குன்னூர் : கேத்தி பாலாடா அருகே அதிவேகத்தில் பைக்கில் வந்த இரு கல்லூரி மாணவர்கள் லாரிக்கடியில் சென்று டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.நீலகிரி மாவட்டம், குன்னூர் பாய்ஸ்கம்பெனி பகுதியை சேர்ந்த சாலமன் என்பவரின் மகன் ரித்திக் சேவியர், 21.கோத்தகிரியை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் ரிட்சன், 21.கேத்தி சி.எஸ்.ஐ., இன்ஜினியரிங்கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த,
 Bike going at high speed: Two killed under lorry  அதிவேகத்தில் சென்ற பைக் :லாரி அடியில் சிக்கி  இருவர் பலி

குன்னூர் : கேத்தி பாலாடா அருகே அதிவேகத்தில் பைக்கில் வந்த இரு கல்லூரி மாணவர்கள் லாரிக்கடியில் சென்று டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.நீலகிரி மாவட்டம், குன்னூர் பாய்ஸ்கம்பெனி பகுதியை சேர்ந்த சாலமன் என்பவரின் மகன் ரித்திக் சேவியர், 21.

கோத்தகிரியை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் ரிட்சன், 21.கேத்தி சி.எஸ்.ஐ., இன்ஜினியரிங்கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த, இருவரும் இன்று மாலை தேர்வை முடித்து, பைக்கில் திரும்பி கொண்டிருந்தனர்.


அதே போல், கேத்தி பாலாடாவிலிருந்து, கேரட் மூட்டைகள் ஏற்றி சென்னைக்கு லாரி சென்று கொண்டிருந்தது.பிரகாசபுரம் அருகே பைபிள் காலேஜ் பகுதியில், மாலை 4:30 மணியளவில் வேகமாக சென்ற பைக், லாரிக்கடியில் சென்று டயரில் சிக்கி விபத்துக்குள்ளானது,இதில் இவரும் உடல், தலை நசுங்கி, சம்பவு இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.கேத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இருவரும் ஹெல்மெட் அணியாமலும், அதிவேகத்தில் சென்றதாலும் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் ரித்திக் கடந்த மாதம் நடந்த கால்பந்து போட்டியில் சிறந்த கால்பந்தாட்ட வீரராக தேர்வு செய்து பரிசு கோப்பை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (4)

Sami - Tirupur,இந்தியா
31-மே-202308:07:37 IST Report Abuse
Sami இளைஞர்கள் சிலர் ஹெல்மெட் அணிவது தங்களை தரக்குறைவாக காட்டுவதாக எண்ணி விதிகளை மதிக்காமல் செல்கின்றனர். திரைப்படங்களில் கூட எந்த ஒரு நடிகரும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது ஸ்டைல் என காட்டி பந்தா காட்டிக்கொள்கின்றனர். இவர்களை போன்றவர்கள் இப்படி விபத்தில் சிக்கி இறப்பது தவிர்க்க முடியாத ஒன்று. இன்னும் தொடரும். பந்தா, ஸ்டைல், கெத்து என வண்டி ஓட்டும் எவரும் இறப்பது தவறில்லை.
Rate this:
Cancel
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
31-மே-202307:11:52 IST Report Abuse
madhavaraman ஆன்மா சாந்தியடைட்டும்......
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
30-மே-202323:31:06 IST Report Abuse
Raj ஹெல்மெட்... அணியவில்லை அதி வேகம்..,. மக்களின் சாபம்.. முடிந்தது கதை... ஆன்மா சாந்தியடைட்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X