பாதுகாப்பான மாநிலம் தமிழகம்;  கவர்னர் ரவி பெருமிதம்
பாதுகாப்பான மாநிலம் தமிழகம்; கவர்னர் ரவி பெருமிதம்

பாதுகாப்பான மாநிலம் தமிழகம்; கவர்னர் ரவி பெருமிதம்

Updated : மே 31, 2023 | Added : மே 31, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: ''பிற மாநில மக்கள், தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக கருதுகின்றனர்,'' என, கவர்னர் ரவி கூறினார்.சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று, 'கோவா தினம்' கொண்டாடப்பட்டது. கோவா மாநில கலை நிகழ்ச்சிகளும், சுதந்திர போராட்ட வீரர் ராம் மனோகர் லோகியா குறித்த நாடகமும் நடந்தன.விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:இந்த நிகழ்ச்சி வாயிலாக கோவா மக்களின் மொழி, கலாசாரம்,
Tamil Nadu Governor Ravi Perumitham is a safe state   பாதுகாப்பான மாநிலம் தமிழகம்;  கவர்னர் ரவி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ''பிற மாநில மக்கள், தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக கருதுகின்றனர்,'' என, கவர்னர் ரவி கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று, 'கோவா தினம்' கொண்டாடப்பட்டது. கோவா மாநில கலை நிகழ்ச்சிகளும், சுதந்திர போராட்ட வீரர் ராம் மனோகர் லோகியா குறித்த நாடகமும் நடந்தன.

விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:

இந்த நிகழ்ச்சி வாயிலாக கோவா மக்களின் மொழி, கலாசாரம், கலைகள் பற்றி அறிய முடிந்தது. கோவா மக்கள் பல மாநிலங்களிலும் வாழ்கின்றனர்; தமிழகத்திலும் உள்ளனர். சில தினங்களுக்கு முன், மஹாராஷ்டிரா மாநில தினம் இங்கு கொண்டாடப்பட்டது. இது தான் நம் இந்தியா.

கோவா மாநிலத்தில் உள்ள மக்கள் அன்பானவர்கள். சுற்றுலா பயணியரும் முதலில் தேர்வு செய்வது, கோவா மாநிலம் தான். ஆனால், இதற்கு முன் கோவா மாநிலம், பல இக்கட்டுகளை சந்தித்து உள்ளது.

சுதந்திரத்திற்கு பின்னரும் போர்ச்சுகீசியர்கள் ஆதிக்கத்தால், அங்கு இருந்த மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர். தற்போது, அந்த மாநிலம் துடிப்பான மக்களை கொண்டுள்ளது.

இந்தியா பல நாடுகளுக்கு வழிகாட்டியாக மாறி உள்ளது. நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருப்பது தான், நாட்டுக்கு வலிமை தரும்.

இந்தியா என்பது ஆன்மிகம், கலாசாரம் நிறைந்த நாடு.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், தமிழகத்துக்கு கல்விக்காகவும், தொழில் நடத்துவதற்காகவும் வருகின்றனர். பிற மாநில மக்கள், தமிழகத்தை தாய் மாநிலமாகவே கருதுகின்றனர். அது மட்டுமல்லாமல், தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்பதால், இங்கு வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், கவர்னர் செயலர் ஆனந்த்ராவ் பாட்டீல், சம்யுக்தா கவ்டா சரஸ்வத் சபா தலைவர் தினேஷ் நாயக் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (7)

31-மே-202316:22:17 IST Report Abuse
அப்புசாமி வந்தாரை வாழவைக்கும் தமிழகம். இவருக்கு இன்னிக்கிதான் தெரிஞ்சிருக்கு.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
31-மே-202314:28:06 IST Report Abuse
venugopal s ஒரு பீகார் காரருக்கு தெரிந்த உண்மை கூட நம்மஊர் சங்கிகளுக்கு தெரியவில்லையே!
Rate this:
Cancel
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
31-மே-202310:37:26 IST Report Abuse
Ramu இதே கருத்தை முதலமைச்சர் சொன்னபோதும், "தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது" என்ற கருத்தை சட்டசபையில் பேச மறுத்த இதே கவர்னர் அவர்கள், இப்போ இந்த கருத்தினை சொல்லவேண்டிய அவசியம் என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X