7,000 டன் நெல் மூட்டைகள் மாயமா?: கலெக்டர் மறுப்பு
7,000 டன் நெல் மூட்டைகள் மாயமா?: கலெக்டர் மறுப்பு

7,000 டன் நெல் மூட்டைகள் மாயமா?: கலெக்டர் மறுப்பு

Updated : மே 31, 2023 | Added : மே 31, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
தர்மபுரி: தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக திறந்த வெளி நெல் குடோனில் இருந்து, 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது தொடர்பாக, ரைஸ் மில்களில் தணிக்கை நடந்தது. தர்மபுரி கலெக்டர் பங்களா பின்புறம், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக திறந்தவெளி நெல் குடோன் உள்ளது. இங்கிருந்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரைஸ் மில்களுக்கு, நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டு, அரிசியாக ரேஷன் கடைகளுக்கு
Audit of 7,000 tons of paddy bags in Mayam Rice Mills  7,000 டன் நெல் மூட்டைகள் மாயமா?: கலெக்டர் மறுப்பு

தர்மபுரி: தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக திறந்த வெளி நெல் குடோனில் இருந்து, 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது தொடர்பாக, ரைஸ் மில்களில் தணிக்கை நடந்தது.
தர்மபுரி கலெக்டர் பங்களா பின்புறம், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக திறந்தவெளி நெல் குடோன் உள்ளது. இங்கிருந்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரைஸ் மில்களுக்கு, நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டு, அரிசியாக ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடோனில் இருந்து, 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானதாக. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக விஜிலன்ஸ் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

அவர்கள் நடத்திய சோதனையில், நெல் மூட்டைகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து, அவர்கள் சென்னையில் உள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.


இந்நிலையில், இது தொடர்பாக நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில ரைஸ் மில்களுக்கு அனுப்பப்பட்ட நெல் மூட்டைகளின் எடை மற்றும் ரைஸ் மில்களில் உள்ள நெல் மூட்டைகளின் எடை குறித்து, நுகர் பொருள் வாணிப கழகத்தினர் தணிக்கையில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் தனது பங்களா பின்புறம் உள்ள திறந்தவெளி நெல் குடோனை தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த குடோனில் இருந்து 7000 டன் நெல் மூட்டைகள் மாயமாக வாய்ப்பில்லை, இதுகுறித்து சென்னை இருந்து ஒரு குழு வரும். தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்தும் ஒரு குழு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள ரைஸ் மில்களில் உள்ள இருப்பு நெல் குறித்தும் ஆய்வு செய்கின்றனர். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (9)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
01-ஜூன்-202306:35:31 IST Report Abuse
N Annamalai யார் இதற்க்கு பொறுப்பு .தமிழகத்தில் தான் விளைந்த நெல்லுக்கு மரியாதை கிடைப்பது இல்லை .
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-ஜூன்-202304:05:25 IST Report Abuse
Bhaskaran கலெக்டர் அலுவலக ஆட்களுக்கு பங்கு கொடுத்துவிட்டு மிச்சத்தை எலி முழங்கி விட்டது
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
31-மே-202318:32:49 IST Report Abuse
D.Ambujavalli கவலையே வேண்டாம் திராவிட மாடலின் பிதாமகர் , கலைஞர் காட்டிய வழியில் எறும்பு மற்றும் எலிகள் பொறுப்பேற்றுக் கொண்டுவிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X