வட கொரியா ஏவிய உளவு செயற்கை கோள் தோல்வியில் முடிந்தது!
வட கொரியா ஏவிய உளவு செயற்கை கோள் தோல்வியில் முடிந்தது!

வட கொரியா ஏவிய உளவு செயற்கை கோள் தோல்வியில் முடிந்தது!

Updated : மே 31, 2023 | Added : மே 31, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
பியொங்யாங்: வடகொரியா நாட்டின் முதல் உளவு செயற்கை கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக, அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.வடகொரியா தனது முதல் உளவு செயற்கோள் ராக்கெட் முலமாக நாட்டின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி பகுதியில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் இந்த ராக்கெட் பல பிரச்சனைகளை சந்தித்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பியொங்யாங்: வடகொரியா நாட்டின் முதல் உளவு செயற்கை கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக, அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.




latest tamil news


வடகொரியா தனது முதல் உளவு செயற்கோள் ராக்கெட் முலமாக நாட்டின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி பகுதியில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் இந்த ராக்கெட் பல பிரச்சனைகளை சந்தித்து நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது.


ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை அடுத்து தென் கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் பொது மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ராக்கெட் ஏவப்பட்டதில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டதால் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.


நீண்ட தூர ஏவுகனை தொழில் நுட்பத்தை வடகொரியா பயன்படுத்துவதற்கு ஐ.நா சபை தடை விதித்துள்ளது. ஐ.நா சபையின் உத்தரவை மீறி நீண்ட தூர ஏவுகனை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடகொரியா உளவு செயற்கை கோளை விண்ணில் ஏவ முயற்சி செய்தது தோல்வியில் முடிந்தது.



latest tamil news


முன்னதாக வடகொரியா நாட்டில் உளவு செயற்கை கோள் ஏவப்படுவதை அறிந்து ஜப்பான் அரசு வடகொரியாவின் உளவு செயற்கை கோள் ஜப்பான் எல்லைக்குள் வந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
31-மே-202320:25:12 IST Report Abuse
Ramesh Sargam அந்த ஊரு அதிபர் இந்த தோல்விக்கு காரணமானவர்களை இந்நேரம் கொன்றிருப்பாரே...
Rate this:
Cancel
thangam - bangalore,இந்தியா
31-மே-202319:36:20 IST Report Abuse
thangam enathu aasai thiravida katchiyinarai north korea anuppivida vendum.
Rate this:
Rajinikanth - Mylapore,இந்தியா
01-ஜூன்-202311:25:49 IST Report Abuse
Rajinikanthஅதே போல அவர்களுக்கும் சங்கிகளை அங்கு அனுப்ப வேண்டும் என்று ஆசை இருக்காமல் இருக்கும்?...
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
31-மே-202316:11:13 IST Report Abuse
raghavan கீழே விழுந்ததற்கு 10 பேரு மேல போயி சேர்ந்திருப்பாங்க பாவம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X