காங்கேயம்: மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன், 'சக்கராசனம்' செய்தபடி, சிவன்மலையில் உள்ள 496 படிகளை ஏறினார்.
திருச்சி மாவட்டம் சங்கிலிஆண்டபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆனந்த வெங்கடேஷ், 37. இவரது மகன் பத்மேஷ் சாய்தேவ், 8, தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.
சிறு வயது முதல் 'ஜிம்னாஸ்டிக்'கில் ஆர்வம் உள்ளவர். இரு ஆண்டுகளாக 'சக்கராசனம்' எனும், உடலை பின்னோக்கி வளைக்கும் யோகாசன முறையில் பயிற்சி பெற்று வந்தார்.
கடந்த மாதம் திருச்சி மலைக்கோட்டையில், 45 நிமிடத்தில், 410 படிகளை, சக்கராசனம் முறையில் ஏறினார். நேற்று அவர், திருப்பூர் மாவட்டம் சிவன்மலை கோவிலில் உள்ள, 496 படிகளை, 35 நிமிடங்களில் ஏறி அசத்தினார். இது, 'சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்' சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.