இது தான் நாத்திக செம்மல்களின் 'ஸ்பெஷாலிட்டி!'
இது தான் நாத்திக செம்மல்களின் 'ஸ்பெஷாலிட்டி!'

இது தான் நாத்திக செம்மல்களின் 'ஸ்பெஷாலிட்டி!'

Updated : ஜூன் 01, 2023 | Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (32) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்...என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடவுள் முருகன், தனக்கு சர்க்கரை வியாதி வந்து விடக்கூடாது என்று பயந்து, முன் எச்சரிக்கையாக சிறுதானியமான, தினை உணவை விரும்பிச் சாப்பிட்டார்' என்று, நக்கல் நையாண்டி செய்திருக்கிறார், விவசாயத் துறை அமைச்சர்
 This is the atheist Semmels specialty!   இது தான் நாத்திக செம்மல்களின் 'ஸ்பெஷாலிட்டி!'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்...


என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடவுள் முருகன், தனக்கு சர்க்கரை வியாதி வந்து விடக்கூடாது என்று பயந்து, முன் எச்சரிக்கையாக சிறுதானியமான, தினை உணவை விரும்பிச் சாப்பிட்டார்' என்று, நக்கல் நையாண்டி செய்திருக்கிறார், விவசாயத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம். அத்துடன், முருகனுக்கு இருக்கும் மனைவியர் இரண்டா, மூன்றா என்ற சந்தேகத்தையும் கிளப்பி, பேரின்பம் அடைந்திருக்கிறார்.

ராமபிரானை செருப்பால் அடித்து அசிங்கப்படுத்துவதில் அலாதி இன்பம் கண்டவர்கள், இப்போது முருகனை பற்றி தரக்குறைவாக பேசுவதில், மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர்.


latest tamil news


நாத்திகச் செம்மலான கருணாநிதி, 'கற்சிலையாக இருக்கும் காளி மாதா, என்றைக்கு வாய் திறந்து பேசினாள்' என்று ஏகடீயம் பேசவில்லையா... மனிதப் பிறவிகளுக்கு மட்டுமே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், 'கொலஸ்ட்ரால்' பிரச்னைகள் உண்டு. பஞ்சாமிர்த பிரியரான முருகனுக்கு சர்க்கரை நோயெல்லாம் வராது.

நாத்திகம் பேசும் பன்னீர்செல்வத்திற்கு வேண்டுமானால் சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு போன்றவை வரும். விலை மாதர்களின் வீடுகளுக்கு சென்றதால் குஷ்டரோகியான அருணகிரிநாதர், முருகனின் அருளால் குணம் அடைந்தார். மனிதனுக்கு வரும் வியாதிகளை குணப்படுத்த, கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற நுால்கள் இருப்பது, இந்த மகானுபாவருக்கு தெரியாது போலும்.

குறவர்களின் கடவுளாக வணங்கப்படும் முருகனுக்கு, தேனும், தினை மாவும் படைத்து தானே வழிபாடு செய்கின்றனர். முருகனுக்கு இரண்டு மனைவியர் என்பது நன்கு தெரிந்திருந்தும், அவருக்கான மனைவியர் இரண்டா, மூன்றா என்ற சந்தேகம் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு வந்திருப்பது தேவையில்லாதது.

நாத்திகச் செம்மல்கள் பலர், மனைவி என்ற பெயரில் ஒருத்தியையும், துணைவி என்ற பெயரில் இன்னொருத்தியையும் வைத்து, இல்லறம் நடத்துகின்றனர். மகளை போல வளர்த்த மணியம்மையை, தன் மனைவியாக்கி மகிழ்ந்த பெருமைக்குரியவர், ஈ.வெ.ராமசாமி.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில், நம்பிக்கை இல்லாதவர்கள் நாத்திகச் செம்மல்கள். அதனால் தான், சினிமா நடிகையான பானுமதி வீடு தேடிப் போனதை பெருமையாக நினைத்தார் அண்ணாதுரை. 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் அதிகம்' என்று வியாக்கியானம் பேசியவர்களும் தி.மு.க.,வினரே.

முருகனை தரக்குறைவாக விமர்சனம் செய்து விட்டு, 'ஜோவியலாகச் சொன்னேன்' என்று சூப்பராக 'அந்தர்பல்டி' அடித்திருக்கிறார், அமைச்சர் பன்னீர்செல்வம். இது தான், நாத்திகச் செம்மல்களின் தனி ஸ்பெஷாலிட்டி. இவர்களை பற்றி ஓட்டளித்த மக்கள் புரிந்து கொண்டால் சரி!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (32)

பரலோகம் - Chennai,இந்தியா
02-ஜூன்-202301:31:58 IST Report Abuse
பரலோகம் கடவுள் இல்லைன்னு சொன்ன பெரியார், கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் 90 வயதுக்கு மேல் வாழ்தார்களே அது எப்படி ?
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
01-ஜூன்-202321:24:33 IST Report Abuse
Mohan இவர் மட்டுமா பேரின்பம் அடைந்தார். இவர்களுக்கு ஓட்டளித்த இந்துக்களும் இதைக்கேட்டு பேரின்பம் அடைந்திருப்ளார்கள்.
Rate this:
Cancel
01-ஜூன்-202320:26:47 IST Report Abuse
ரமேஷ் கருணாநிதிக்கு எத்தனை மனைவி என்று இவர் சொல்லுவாரா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X