கடலை ஒட்டி 'கேபிள்' வழி மின் சப்ளைக்கு அரசு நிதி?
கடலை ஒட்டி 'கேபிள்' வழி மின் சப்ளைக்கு அரசு நிதி?

கடலை ஒட்டி 'கேபிள்' வழி மின் சப்ளைக்கு அரசு நிதி?

Updated : ஜூன் 01, 2023 | Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: கடலோர பகுதிகளில் பாதாள கேபிள் வாயிலாக மின் வினியோகிக்கும் திட்டத்தை துவக்க, தமிழக அரசிடம் இருந்து சிறப்பு நிதியை, மின்வாரியம் எதிர்பார்க்கிறது.கனமழை, புயலின்போது, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், கடலை ஒட்டிய பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்து, மின் கம்பி அறுந்து விழுவது தொடர் கதையாகிறது.இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கடலை ஒட்டிய இடங்களில், பாதாள
Government funding for power supply through cable along the sea?  கடலை ஒட்டி 'கேபிள்' வழி மின் சப்ளைக்கு அரசு நிதி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: கடலோர பகுதிகளில் பாதாள கேபிள் வாயிலாக மின் வினியோகிக்கும் திட்டத்தை துவக்க, தமிழக அரசிடம் இருந்து சிறப்பு நிதியை, மின்வாரியம் எதிர்பார்க்கிறது.


கனமழை, புயலின்போது, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், கடலை ஒட்டிய பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்து, மின் கம்பி அறுந்து விழுவது தொடர் கதையாகிறது.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கடலை ஒட்டிய இடங்களில், பாதாள கேபிள் வாயிலாக மின் வினியோகம் செய்ய முடிவானது.

அத்திட்டம் முதற்கட்டமாக, நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி; கடலுார் மாவட்டத்தில் கடலுார் நகரில், உலக வங்கி நிதியுதவியுடன், 400 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.


latest tamil news


இரு நகரங்களிலும் கேபிள் பதிப்பு பணிகள், 2018ல் துவங்கி, 2022 இறுதியில் முடிந்தன.


இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:


செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கடலை ஒட்டிய பகுதிகளில், கேபிளில் மின் வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதற்கு, 750 கோடி ரூபாய்க்கு மேல் நிதி தேவை. ஏற்கனவே மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.

எனவே, கடலோர பகுதிகளில் கேபிள் வாயிலாக மின் வினியோகம் செய்யும் திட்டத்தை சிறப்பு திட்டமாக கருதி, தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

இதுகுறித்து, அரசிடம் வலியுறுத்த உள்ளோம். நிதி உதவிக்கு உத்தரவாதம் கிடைத்ததும், பணிகள் துவங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மின்வாரியம், சென்னையில் முக்கிய பகுதிகளில், பாதாள கேபிள்; மற்ற மாவட்டங்களில் மின் கம்பம் மேல் செல்லும் மின்கம்பி வாயிலாக மின் வினியோகம் செய்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (6)

01-ஜூன்-202313:50:26 IST Report Abuse
அநாமதேயம் இந்த எப்போதுமே மின்வாரியம் நல்ல சாலைகள் அமைத்த உடனே இவர்கள் தோண்டி சேதப்படுத்துவார்கள் பூமிக்கடியில் புதைத்தால சாலையில் தான் இவர்கள் புகைப்பவர்கள்.பிறகு ரிப்பேர் செய்யும் ஆட்கள் கம்பி வடம் எந்த இடத்தில் செல்கிறது என்று தெரியாமல் சாலையில் அங்கங்கே தோண்டி கண்டு பிடித்து சரிசெய்த பின்னர் அப்படியே அந்த குழிகளை சரியாக மூடாமல் செல்வார்கள். இதைசரிசெய்ய எந்த மாநகராட்சி நகராட்சி சாலைத்துறை எவரும் சரிசெய்ய மாட்டார்கள்
Rate this:
Cancel
Varadarajan Nagarajan - டெல்டாக்காரன்,இந்தியா
01-ஜூன்-202312:23:39 IST Report Abuse
Varadarajan Nagarajan அணில்களினால் மின்தடை ஏற்படாது. ஆனால் புதிதாக பெருச்சாளிகளினால் மின்தடை ஏற்படும்
Rate this:
Cancel
01-ஜூன்-202307:35:21 IST Report Abuse
முருகன் அனைத்து பகுதிகளிலும் இதனை செயல்படுத்த வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X