பங்குகளை விற்று 3.5 பில்லியன் நிதி திரட்டும் அதானி குழுமம்..!
பங்குகளை விற்று 3.5 பில்லியன் நிதி திரட்டும் அதானி குழுமம்..!

பங்குகளை விற்று 3.5 பில்லியன் நிதி திரட்டும் அதானி குழுமம்..!

Updated : ஜூன் 01, 2023 | Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (19) | |
Advertisement
பங்குச்சந்தையில் மீண்டும் எழுச்சி கண்டுள்ள அதானி குழுமம், மூலதன செலவுகளை சமாளிக்க பங்குகள் விற்பனை வாயிலாக சுமார் 3.5 பில்லியன் டாலர் நிதியை திரட்ட உள்ளது.அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் அறிக்கையை தொடர்ந்து, பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. நெருக்கடியான சூழலில், பங்குகள் வெளியீடு வாயிலாக ரூ.20,000 கோடி திரட்டுவதை திரும்ப பெறுவதாக அதானி
Adani Group decides to raise 3.5 billion by selling shares  பங்குகளை விற்று 3.5 பில்லியன் நிதி திரட்டும் அதானி குழுமம்..!


பங்குச்சந்தையில் மீண்டும் எழுச்சி கண்டுள்ள அதானி குழுமம், மூலதன செலவுகளை சமாளிக்க பங்குகள் விற்பனை வாயிலாக சுமார் 3.5 பில்லியன் டாலர் நிதியை திரட்ட உள்ளது.


அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் அறிக்கையை தொடர்ந்து, பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. நெருக்கடியான சூழலில், பங்குகள் வெளியீடு வாயிலாக ரூ.20,000 கோடி திரட்டுவதை திரும்ப பெறுவதாக அதானி குழுமம் அறிவித்தது. சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள், தற்போது மீண்டும் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை

எழுச்சி கண்டு வருகிறது.


இந்நிலையில், அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் பங்குகள் விற்பனை வாயிலாக 2.5 பில்லியன், (ரூ.21,000 கோடி) திரட்ட அதானி குழும நிர்வாக ரீதியாக ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 2 வாரங்களில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகள் விற்பனை வாயிலாக 1 பில்லியன் டாலர் திரட்ட முடிவு செய்துள்ளது.


நிர்வாக ஒப்புதல்கள் பெற்ற அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் ஆகியவை பங்குதாரர்களின் ஒப்புதலைக் கோரியுள்ளன.

அதானி எனர்ஜி நிர்வாக குழு, ஜூன் முதல் அல்லது 2வது வாரத்தில் கூடி, நிதி திரட்ட ஒப்புதல் வழங்கவுள்ளது.


latest tamil news

மூலதனச் செலவுத் தேவைகளுக்கு திரட்டப்படும் இந்த 3.5 பில்லியன் டாலர் நிதி திரட்டும் பணி, நடப்பு நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டிற்குள் முடிவடையுமென எதிர்ப்பார்க்கபடுகிறது.


தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகளை வழங்குவதன் மூலம் நிதி திரட்டப்படும். ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கில் உள்ள முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள முதலீட்டாளர்களுடன், மேலும் சில புதிய முதலீட்டாளர்களும் இணையலாமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மார்ச் முதல் வாரத்தில் அதானி குழுமத்துக்கு சொந்தமான 4 நிறுவன பங்குகளில் 1.87 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள அமெரிக்காவை சேர்ந்த ஜி.கியூ.ஜி பார்ட்னர்ஸ்,
மீண்டும் முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (19)

Ratheesh - Coimbatore ,இந்தியா
02-ஜூன்-202307:50:18 IST Report Abuse
Ratheesh Indiala evanaiyum valara Vida matinga evanukum porali pesa thakuthiyummila pesuravaenga harichandrana ena elam politics
Rate this:
Cancel
Bellie Nanja Gowder - Coimbatore,இந்தியா
01-ஜூன்-202320:02:29 IST Report Abuse
Bellie Nanja Gowder இது ஷேர் மார்க்கெட்டில் மிகவும் சகஜம், அடுத்த ஓரிரு வருடங்களில் அதனை ஷேர்கள் பழைய விலைக்கு வந்துவிடும். அவர் எந்த பெரிய தவரையம் செய்துவிடவில்லை . சன் டிவி காரர்களை போல் எந்த விஷமத்தையும் செய்யவில்லை. அதனால் ஹிண்டன்பார்க் மீது வழக்கு தொடுக்கும் அவசியம் இல்லை.
Rate this:
Cancel
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
01-ஜூன்-202319:15:42 IST Report Abuse
தாமரை மலர்கிறது இந்திய வங்கிகள் மற்றும் லைஃ இன்சூரன்ஸ் அடானியின் பங்குகளை வாங்கி குவிக்க வேண்டும். அடானியின் பங்குகள் உயர்ந்து வருகின்றன. அடானியின் பங்குகள் உயர்ந்தால், இந்தியாவின் ஏர்போர்ட்கள் மற்றும் துறைமுகங்கள் மற்றும் தொழில்களின் மதிப்பும் உயரும். வரப்பு உயர என்று ஒவ்வையார் சொன்னதை போன்று அதானி பங்குகள் உயர என்று இன்று அவ்வையார் சொல்லி இருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X