"இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உலகிலேயே அதிகம்": அனுராக் தாக்கூர் பெருமிதம்
"இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உலகிலேயே அதிகம்": அனுராக் தாக்கூர் பெருமிதம்

"இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உலகிலேயே அதிகம்": அனுராக் தாக்கூர் பெருமிதம்

Updated : ஜூன் 01, 2023 | Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (17) | |
Advertisement
மும்பை: இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உலகிலேயே மிக அதிகமாக இருக்கும் என்பது மார்கன் ஸ்டான்லி அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா உலகளவில் ஒரு இடத்தை பெற்று, ஆசிய மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக மாறி உள்ளது என பொருளாதார ஆய்வு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி

மும்பை: இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உலகிலேயே மிக அதிகமாக இருக்கும் என்பது மார்கன் ஸ்டான்லி அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.




latest tamil news


பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா உலகளவில் ஒரு இடத்தை பெற்று, ஆசிய மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக மாறி உள்ளது என பொருளாதார ஆய்வு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி அறிக்கை வெளியிட்டுள்ளது.


இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: பிரதமர் மோடியின் தலைமையில் நமது நாட்டில் விரைவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உலகிலேயே மிக அதிகமாக இருக்கும் என்பது மார்கன் ஸ்டான்லி அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது. இந்தியா மீதும், பாஜ., மீதும் உலகம் நம்பிக்கை கொண்டுள்ளது.


மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் அனைவருக்கும் சமம். மல்யுத்த வீரர்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் அதனை நாங்கள் நிறைவேற்றுவோம். மல்யுத்த வீரர்கள் விவகாரத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக கையாளுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.



latest tamil news


வழிபாடு


மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜ., வினர் வழிபாடு நடத்தினார். இதையடுத்து, மோடி தலைமையிலான பாஜ., அரசு 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், கடவுளிடம் ஆசிர்வாதம் வாங்க மும்பை சித்தி விநாயகர் கோவிலுக்கு வந்துள்ளேன் என அனுராக் தாக்கூர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (17)

Vatsan - மும்பை,இந்தியா
01-ஜூன்-202323:12:25 IST Report Abuse
Vatsan பெரும்பணக்காரர்கள் சொத்து உயர்வு மற்றும் PM Cares நிதி உயர்வு ரொம்ப அதிகம்தான். ஐயா cost of living உயர்ந்த அளவுக்கு பொதுமக்களுடைய பொருளாதாரம் உயரவில்லை. அதிகப்படியான பெட்ரோல் விலையினால் அரசை நடத்திக்கொண்டு உள்ளார்கள். ஆக்கப்பூர்வமான பொருளாதார நடவடிக்கை எதுவும் இல்லை. 10 வருடத்துக்கு முன்னாள் டாலர் விலை 58 ரூபாய் இன்றய தேதியில் 83 ரூபாய். டாலர் மதிப்பு குறித்து 2014 ல் கதறிய எவனும் இப்போது வாய் திறப்பது இல்லை. ஏனென்றால் இதனால் பலன் அடைவது பெரு முதலாளிகளே. சாமானிய மக்களுக்கு நாமமோ நாமம் தான்.
Rate this:
Cancel
Ram - Dindigul,இந்தியா
01-ஜூன்-202322:49:16 IST Report Abuse
Ram நான்கே ஆண்டில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஆம்...உங்க அதானியின் சொத்து வளர்ச்சி விகிதம் உலகிலேயே அதிகம் அவை எல்லாமே நீங்கள் மக்களிடம் கொள்ளை அடித்து (GST, இந்திய மக்களின் சொத்துக்களான Airport, Ports, etc ஓசியில் அதானியிடம் கொடுத்தது..) அதானியிடம் கொடுத்தது உலகிலேயே அதிகம் தான்
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
01-ஜூன்-202321:44:11 IST Report Abuse
K.n. Dhasarathan பாவம் இந்த ஊர்க்குருவி உங்கள் புள்ளி விபரங்கள் அனைத்தும் மற்ற நிறுவனங்கள் புள்ளி விபரங்கள் ஒன்றாக இல்லை, ஏன் வெளி நாட்டின் புள்ளி விபரங்கள் கூட ஒத்துப்போவதில்லை, அதற்கு என்ன அர்த்தம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X