மணிப்பூர் கலவரம் விசாரிக்க கமிஷன்:அமித்ஷா அறிவிப்பு
மணிப்பூர் கலவரம் விசாரிக்க கமிஷன்:அமித்ஷா அறிவிப்பு

மணிப்பூர் கலவரம் விசாரிக்க கமிஷன்:அமித்ஷா அறிவிப்பு

Updated : ஜூன் 01, 2023 | Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
இம்பால்: மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மெய்டி மற்றும் குகி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இதனால் அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய உள்துறை
Commission of Inquiry to Probe Manipur Riots: Amit Shah Announces  மணிப்பூர் கலவரம் விசாரிக்க கமிஷன்:அமித்ஷா அறிவிப்பு

இம்பால்: மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மெய்டி மற்றும் குகி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இதனால் அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


இதனை தொடர்ந்து இன்று(ஜூன்1) நிருபர்களை சந்தித்த அமித்ஷா கூறியதாவது: கலவரத்தை தொடர்ந்து மணிப்பூரில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்தேன். இயல்பு நிலை கொண்டு வருவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். மெய்டி, குகி சமூகத்தினரையும் சந்தித்தேன். கலவரத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.


கலவரத்தில் ஈடுபட்டவர்களை தப்ப விட மாட்டோம். கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும். கலவரம் தொடர்பாக 6 வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்கும். கவர்னர் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய அமைதிக் குழு ஒன்று அமைக்கப்படும்.


பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணம் வழங்கப்படும். ரேசன் பொருட்கள் வழங்க சிறப்பு முகாம்கள் அமைப்போம். பள்ளிகள் திறக்கப்படும் வரை ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சொத்துகளை இழந்தோர் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நாளை நிவாரணம் அறிவிக்கப்படும். மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.


பாதுகாப்பு படையினரிடம் ஆயுதங்களை திருடிச் சென்றவர்கள், அதனை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

01-ஜூன்-202315:34:23 IST Report Abuse
அப்புசாமி விசாரணைக் கமிஷன்னாலே ஆறுமுகசாமிதான் நினைவுக்கு வர்ராரு.
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
01-ஜூன்-202314:14:36 IST Report Abuse
Raj நாட்டில் கலவரம் செய்பவர்களே சொல்கிறார்கள் "கலவரத்தில் ஈடுபட்டவர்களை தப்ப விட மாட்டோம்"
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-ஜூன்-202312:33:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் லாலீ லாலீ லாலீ லாலீ... கொர்ர்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X