சென்னை: பார்லிமென்டிற்கு செங்கோல் சென்றுள்ளதால் தமிழகத்தில் அறம் சார்ந்த ஆட்சி அமையப்போகிறது என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து, அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
பார்லிமென்டிற்கு செங்கோல் சென்றுள்ளதால் தமிழகத்தில் அறம் சார்ந்த ஆட்சி அமையப்போகிறது. 2024ல் அறம் சார்ந்த ஆட்சியா?. 2026ல் அறம் சார்ந்த ஆட்சியா? என்பதை ஆண்டவன் முடிவு செய்வார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கண்டிப்பாக கட்டப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு கொஞ்சமாவது மானம் ரோஷம் உள்ளதா?.
பிரதமர் மோடி, தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளதை் தந்து, தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது, மறுபுறம் திமுக அரசு தனது மெத்தனப் போக்கினால் 500 மருத்துவக் கல்வி இடங்களை இழக்கும் அபாயத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:
எஸ்டி, எஸ்சி, நிதியை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தவில்லை. பட்டியலின மாணவர் விடுதிகள் தங்கும் நிலையில் இல்லை எனக் கூறினார்.