பாரமுல்லா: காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவல் அடிப்படையில், பாரமுல்லா மாவட்டத்தின் பிரெஷ்திஹர் கிரீரி கிராமத்தில் சோதனை சாவடி அமைத்து போலீசார் சோதனை நடத்தினர்.
இதனை பார்த்த பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 2 சீன பிஸ்டல்கள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.