"மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசிடம் முறையிடுவேன்": கர்நாடகா துணை முதல்வர் புது தகவல்
"மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசிடம் முறையிடுவேன்": கர்நாடகா துணை முதல்வர் புது தகவல்

"மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசிடம் முறையிடுவேன்": கர்நாடகா துணை முதல்வர் புது தகவல்

Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (19) | |
Advertisement
பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் பேச்சுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மேகதாது திட்டம் தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவேன் என கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் மீண்டும் தெரிவித்துள்ளார்.அமைச்சர் துரைமுருகன், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை,
Meghadahu dam issue: I will appeal to Tamil Nadu govt: Karnataka Deputy Chief Minister updates  "மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசிடம் முறையிடுவேன்": கர்நாடகா துணை முதல்வர் புது தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் பேச்சுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மேகதாது திட்டம் தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவேன் என கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் மீண்டும் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் துரைமுருகன், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை, தமிழகம் அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும். கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், பதவிப் பிரமாணம் எடுத்த சில நாட்களுக்கு உள்ளாகவே, அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.


மேகதாது குறித்த முழு விபரத்தை, அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் எனக் கருதுகிறேன். எனவே, தமிழகத்திற்கு உரிமையுள்ள மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல என எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். மேலும்,சிவகுமார் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டத்தை தெரிவித்து இருந்தனர்.



இந்நிலையில், இன்று(ஜூன்01) சிவகுமார் வெளியிட்ட அறிக்கை:

மேகதாது திட்டம் தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவேன். மேதாதுவால் காவிரி படுகை விவசாயிகளுக்கு பாசன நீர், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கும். தமிழக மக்கள் மீது கோபமோ, வெறுப்போ இல்லை; அவர்களை சகோதர்களாக பார்க்கிறேன்.


மேகதாது திட்டத்தால் கர்நாடகா, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களும் பயனடையும். பட்ஜெட்டில், 1000 கோடி ரூ.அறிவிக்கப்பட்டது. ஆனால் செலவிடப்படவில்லை. அந்த பணம் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த பயன்படுத்தப்படும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு ஒன்றுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (19)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூன்-202300:19:17 IST Report Abuse
venugopal s ஊர் இரண்டு பட்டால் பாஜகவினருக்கு மன்னிக்கவும்,கூத்தாடிக்கு கொண்டாட்டம்!
Rate this:
Cancel
கால் தடம் பதி - bangalore, hsr layout,இந்தியா
01-ஜூன்-202321:22:47 IST Report Abuse
கால் தடம் பதி அதில் வந்த தண்ணீரை சேமிக்க துப்பில்லை எனக்கு உரிமை இருக்கு என்று பேச வந்துட்டானுங்க
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
01-ஜூன்-202321:11:19 IST Report Abuse
sankaranarayanan மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் பேச்சுக்கு தமிழக திராவிட மாடல் அரசின் முதல்வர் வாயை திறக்கவே இல்லையே ஏன் இனி மவுனம். இந்த மவுனம் சம்மதத்துக்கு ஊன்றுகோலாகும் காவிரி பிரச்சனையும் முன்பு இதே போலத்தான் கலைஞர் முதலவாறாக இருந்தபோது கைவிட்டு சென்றுவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X