காதலனிடம் மனைவியை ஒப்படைத்த கணவர் : ஜார்கண்டில் ‛அந்த 20 நாட்கள்'
காதலனிடம் மனைவியை ஒப்படைத்த கணவர் : ஜார்கண்டில் ‛அந்த 20 நாட்கள்'

காதலனிடம் மனைவியை ஒப்படைத்த கணவர் : ஜார்கண்டில் ‛அந்த 20 நாட்கள்'

Updated : ஜூன் 01, 2023 | Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம், பலமு மாவட்டம், மனாடு காவல் நிலையத்துக்குட்பட்ட, கிலா கிராமத்தைச் சேர்ந்தவர், சனோஜ் குமார் சிங். இவருக்கும், லெஸ்லிகஞ்ச் காவல் நிலையத்துக்கு உட்பட்ட, துர்க்கடி பகுதியில் வசிக்கும், பிரியங்கா குமாரி என்பவருக்கும், கடந்த மாதம், 10ம் தேதி திருமணம் நடந்தது.பிரியங்கா குமாரி, 2012ம் ஆண்டு முதல், துர்க்கடி கிராமத்தைச் சேர்ந்த, ஜிதேந்திரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம், பலமு மாவட்டம், மனாடு காவல் நிலையத்துக்குட்பட்ட, கிலா கிராமத்தைச் சேர்ந்தவர், சனோஜ் குமார் சிங். இவருக்கும், லெஸ்லிகஞ்ச் காவல் நிலையத்துக்கு உட்பட்ட, துர்க்கடி பகுதியில் வசிக்கும், பிரியங்கா குமாரி என்பவருக்கும், கடந்த மாதம், 10ம் தேதி திருமணம் நடந்தது.




latest tamil news


பிரியங்கா குமாரி, 2012ம் ஆண்டு முதல், துர்க்கடி கிராமத்தைச் சேர்ந்த, ஜிதேந்திரா விஸ்வகர்மா என்பவரை, காதலித்து வந்துள்ளார்.


இவர்களது, திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இச்சூழலில், திருமணத்துக்கு பின்பும், தனது காதலன் ஜிதேந்திராவை மறக்க முடியாததால், அவருடன், மொபைல் போனில் பிரியங்கா குமாரி தொடர்ந்து, பேசி வந்துள்ளார்.


சில தினங்களுக்கு முன், இருவரும், வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள, முடிவு செய்தனர். அதன்படி, கிலா கிராமத்துக்கு சென்ற, ஜிதேந்திரா விஸ்வர்கமா, அங்கிருந்து, பிரியங்கா குமாரியை அழைத்துக் கொண்டு, தப்பியோடினார்.


இருவரையும், பிடித்து வைத்து கொண்ட ஊர்மக்கள், பெண்ணின் கணவரான, சனோஜ் குமார் சிங்கிற்கு தகவல் தெரிவித்தனர்.


அங்கு, சென்ற அவர், எதுவும் பேசாமல், தனது மனைவியை, அவரது, காதலனுடன் அனுப்பி வைத்தார்.



latest tamil news


திருமணமான 20 நாட்களிலேயே மனைவியை அவரது காதலனுடன் கணவன் அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருள் ஆகியது. இது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் எதுவும் அளிக்கவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

mrsethuraman - Bangalore,இந்தியா
02-ஜூன்-202320:36:45 IST Report Abuse
mrsethuraman  எங்கிருந்தாலும் வாழ்க
Rate this:
Cancel
enkeyem - sathy,இந்தியா
02-ஜூன்-202316:46:45 IST Report Abuse
enkeyem ஓடு காலியை எத்தனை நாளைக்கு வைத்து காவல் காக்க முடியும்? தலைமுழுகியது புத்திசாலித்தனம்
Rate this:
Cancel
GANESUN - Chennai,இந்தியா
02-ஜூன்-202316:07:43 IST Report Abuse
GANESUN 20 நாளில் தான் பட்ட கஷ்டம் வாழ்நாள் முழுவதும் காதலனே அனுபவிக்கிட்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X