அமெரிக்காவில் தந்தையின் ஸ்டைலை பின்பற்றும் ராகுல்: பந்த்காலாவில் பந்தாவான லுக்!
அமெரிக்காவில் தந்தையின் ஸ்டைலை பின்பற்றும் ராகுல்: பந்த்காலாவில் பந்தாவான லுக்!

அமெரிக்காவில் தந்தையின் ஸ்டைலை பின்பற்றும் ராகுல்: பந்த்காலாவில் பந்தாவான லுக்!

Updated : ஜூன் 01, 2023 | Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (21) | |
Advertisement
பொதுவாக வெள்ளை குர்தாவில் காணப்படும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ராகுல், தற்போது அமெரிக்க பயணத்தில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தனது தந்தையின் விருப்ப உடையான பந்த்காலாவில் மேடையேறினார். அப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.ராகுல் காந்தி தற்போது 10 நாள் அமெரிக்கச் சுற்றுப் பயணத்தில் உள்ளார். மே 30 அன்று சான் பிரான்சிஸ்கோ நகரில்
Rahul follows his fathers style in America: Stunning look in Bandhgala!  அமெரிக்காவில் தந்தையின் ஸ்டைலை பின்பற்றும் ராகுல்: பந்த்காலாவில் பந்தாவான லுக்!

பொதுவாக வெள்ளை குர்தாவில் காணப்படும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ராகுல், தற்போது அமெரிக்க பயணத்தில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தனது தந்தையின் விருப்ப உடையான பந்த்காலாவில் மேடையேறினார். அப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

ராகுல் காந்தி தற்போது 10 நாள் அமெரிக்கச் சுற்றுப் பயணத்தில் உள்ளார். மே 30 அன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் தரையிறங்கியவர் பல்வேறு கூட்டரங்குகளில் பங்கேற்று பேசி வருகிறார். சாம் பிட்ரோடா அவரை வரவேற்றார். அவர் தான் வெளிநாட்டு காங்கிரஸ் அமைப்பை நிர்வகிக்கிறார்.


வழக்கம் போல் அமெரிக்காவிலும் மோடி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விமர்சனத்தை ராகுல் முன்னெடுக்கிறார். வாஷிங்டன் மற்றும் நியூயார்கிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில்பங்கேற்க உள்ளார். அமெரிக்காவில் அவர் முன் வைக்கும் விமர்சனங்களுக்கு இங்கிருந்து பா.ஜ.க., அமைச்சர்கள் பதிலடி தந்து வருகின்றனர்.


latest tamil news

இந்நிலையில் நேற்று மாலை (மே 31) அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிலிக்கான் வேலி தொழில்முனைவோர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார். அப்போது வழக்கமான வெள்ளை குர்தாவை கைவிட்டு, தனது தந்தையின் ஸ்டைலான கச்சிதமான நீல நிற பந்த்காலா சூட்டில் வந்தார்.


latest tamil news

Advertisement

வெளிநாட்டு பயணம் என்றாலே மேற்கத்தி பாணி உடையான கோட் சூட் பழக்கத்தை உடைத்து, அதற்கு மாற்றாக இந்திய முறையான பந்த்காலாவை பிரபலப்படுத்தியவர் ராஜிவ் காந்தி. அதன் மிடுக்கான தோற்றம், ஸ்ட்ரெயிட் கட் அமைப்பு விமான பைலட்டான ராஜிவை கவர்ந்திருந்தது.


latest tamil news

பந்த்காலா உடையின் தோற்றம் பற்றி தெளிவு இல்லை. ராஜபுத்திரர்களின் அங்கர்கா கோட்டிலிருந்து உருவானதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் இதனை மத்திய ஆசிய உடையான சப்கான் மற்றும் பிரிட்டிஷ் பிராக் கோட்டின் தொகுப்பு என்கின்றனர். இன்னும் சிலர் இந்திய பாரம்பரிய நீள உடையான ஜோத்பூரி அக்கனிலிருந்து, அளவு குறைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, பேண்ட் உடன் சேர்ந்து பந்த்காலாவானது என்பார்கள். பின்னர் 20ம் நூற்றாண்டில் இது ராயல் உடையாக அடையாளம் பெற்றது. வெளிநாட்டில் இந்திய பிரதமர்களின் அடையாளமாக பந்த்காலாவை மாற்றியவர் ராஜிவ் தான்.


latest tamil news

ராஜிவ் பிரதமராகி 1985ல் அவர் லண்டனுக்கு மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணத்தில் கருப்பு, க்ரே, நீல நிறங்களில் பந்த்காலாவில் வலம் வந்தார். பின்னர் அமெரிக்க பயணத்தின் போதும் அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகனுடன் பந்த்காலாவில் காணப்பட்டார். ஐ.நா., மன்றத்தில் உரையாற்றிய போது, சீனா சென்ற போது என வெளிநாடுகளில் எல்லாம் அவரது தேர்வாக பந்த்காலா இருந்தது.


latest tamil news

அதனை தற்போது அவரது மகன் ராகுலும் தேர்ந்தெடுக்கிறார். உள்நாட்டில் சாதாரணமாக டி-ஷர்ட் ஜீன் அல்லது குர்தாவில் எளிமையாக இருக்கும் ராகுல் ஸ்டான்போர்டில் மிக நேர்த்தியாக பந்த்காலா சூட் அணிந்து பந்தாவாக காணப்பட்டார். கடந்த ஆண்டு லண்டன் சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போதும் இதே பந்த்காலாவை தான் தேர்வு செய்திருந்தார். இது அவருக்கு முதிர்ச்சியடைந்த தலைவர் என்ற தோற்றத்தை வழங்க தவறவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (21)

vijay - coimbatore,இந்தியா
05-ஜூன்-202311:03:17 IST Report Abuse
vijay வெளியே நல்லாத்தான் இருக்கப்பு.. ஆனால் உள்ளே "ஒண்ணுமில்ல" ..அப்படியே கொஞ்சம் இருந்தாலும் அவை எல்லாமே.. பொய்கள்.. பொறாமை.... வஞ்சகம்... தனக்கு கிடைக்காதவற்றை அடைய நாட்டையே துண்டாட என்ன வேணாலும் செய்யும் மனப்பான்மை. நான் அடிக்கடி நண்பர்களிடம் சொல்லிக்கொள்வேன்..."என்று காங்கிரஸ் கட்சி முழுவதுமாக இல்லாமல் ஆக்கப்படுகிறதொ, வேற்றுநாட்டு குடும்பம் அரசியலில் இருந்து மட்டும் அல்ல, இந்த நாட்டில் இருந்தே விரட்டப்படிகிறதோ, அன்று எனக்கு நன்னாள் உண்மையான சுதந்திரம் கிடைக்கும், கொண்டாடுவேன்". நிச்சயமாக ஓரளவுக்கு கொஞ்சமாவது நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்களும் இதே போன்ற கருத்தை கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.
Rate this:
Cancel
02-ஜூன்-202319:37:48 IST Report Abuse
பேசும் தமிழன் உண்மையான காந்தியின் கனவை நனவாக்க .....அது தாங்க காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற....இந்த இத்தாலி பப்பு ...காந்தி என்று போலியாக பெயரை வைத்து கொண்டு... காங்கிரஸ் கட்சியை அழிக்கும் செயலை செய்து வருகிறார் ....அதற்க்காக இந்திய மக்கள் அனைவரும் .....இந்த இத்தாலி பப்புக்கு நன்றி சொல்ல வேண்டும்
Rate this:
Cancel
02-ஜூன்-202319:28:27 IST Report Abuse
பேசும் தமிழன் புலியை பார்த்து ....பூனை சூடு போட்டு கொண்ட கதை தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X