10 வருஷ ஆட்சியில் எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடியிருக்கலாமே!
10 வருஷ ஆட்சியில் எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடியிருக்கலாமே!

10 வருஷ ஆட்சியில் எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடியிருக்கலாமே!

Updated : ஜூன் 02, 2023 | Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த, ஜெயலலிதா ஆட்சியில், பொதுமக்கள் ஆட்சேபித்த, 500, 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டன. பழனிசாமி ஆட்சியில், 500 கடைகள் மூடப்பட்டன. தி.மு.க., ஆட்சியில் விற்பனை குறைவாக உள்ள கடைகளை மட்டும் மூட கணக்கெடுப்பு நடக்கிறது. மது விற்பனை, 36 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 44 ஆயிரம் கோடி ரூபாயாக
All Tasmac shops could have been closed in 10 years of rule!  10 வருஷ ஆட்சியில் எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடியிருக்கலாமே!


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு:

தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த, ஜெயலலிதா ஆட்சியில், பொதுமக்கள் ஆட்சேபித்த, 500, 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டன. பழனிசாமி ஆட்சியில், 500 கடைகள் மூடப்பட்டன. தி.மு.க., ஆட்சியில் விற்பனை குறைவாக உள்ள கடைகளை மட்டும் மூட கணக்கெடுப்பு நடக்கிறது. மது விற்பனை, 36 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 44 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்ததில் இருந்தே, மக்கள் நலனில், தி.மு.க., கொண்டுள்ள அக்கறை அப்பட்டமாக தெரிகிறது.


உண்மையில் மக்கள் மீது, இவங்க கட்சிக்காரங்களுக்கு அக்கறை இருந்திருந்தா, வருஷத்துக்கு, 500 டாஸ்மாக் கடைகளை மூடியிருந்தாலும், 10 வருஷம் ஆட்சி நடந்த போது, எல்லா கடைகளையும் மூடியிருக்கலாமே!



அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:

தர்மபுரியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் சேமித்து வைக்கப்பட்ட, 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையில் காணாமல் போனதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்பதை கண்டறிய, உரிய விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும். இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஒரு மூட்டையில், 40 கிலோ நெல்லை அடைக்கிறாங்க... அப்ப, 7,000 டன் நெல்லுன்னா, ஒண்ணே முக்கால் லட்சம் மூட்டைகள் கொள்ளை போயிருக்கா... எம்மாடியோவ்...!


latest tamil news


ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் அறிக்கை:

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக ஆதீனங்களையும், பார்லிமென்டில் சைவ நெறி செங்கோல் நிறுவியதையும் விமர்சனம் செய்து பேசிய, சி.பி.ஐ., - எம்.எல்., கட்சியைச் சேர்ந்த அந்தோணிமுத்து உள்ளிட்ட குழுவினர் மீது வழக்கு பதிவு செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


'திராவிட மாடல்' ஆட்சியாளர்கள், பிரதமரையும், ஹிந்து மதத்தையும் விமர்சனம் செய்யுறவங்களை கொண்டாட தானே செய்வாங்க... நடவடிக்கை எப்படி எடுப்பாங்க?



பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

புதுக்கோட்டையில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில், கொலையாளிகளை கைது செய்த காவல் துறையினரை, தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். காவல் துறையினருக்கு உத்வேகம் அளிக்கும், இந்தச் செயலை நானும் பாராட்டுகிறேன். அதே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில், பட்டியலின சமுதாயத்தினரின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட கொடுங்குற்றம் நிகழ்ந்து ஐந்து மாதங்களாகி விட்டது. காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க டி.ஜி.பி., நடவடிக்கை எடுப்பாரா?


இந்த மாத கடைசியில் பணி ஓய்வு பெறுவதற்கு முன், டி.ஜி.பி., பல சவாலான வழக்குகளை முடித்து வைத்து விட்டு செல்வார் என, உறுதியாக நம்புவோம்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

GANESUN - Chennai,இந்தியா
02-ஜூன்-202310:10:02 IST Report Abuse
GANESUN ஒருவேளை வராத நெல்லுக்கு கணக்கெழுதி காசு கொடுக்கப்பட்டதா?
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
02-ஜூன்-202308:11:43 IST Report Abuse
chennai sivakumar சூரியன் மேற்கே உத்தித்தாலும் டாஸ்மாக் மூடு விழா வெறும் கனவு
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
02-ஜூன்-202307:03:31 IST Report Abuse
r ravichandran நேர்மையானவர்கள் என்று அறியப்படும் அதிகாரிகள் கூட உச்ச கட்ட பதவிக்கு வந்தால் மௌனி ஆகி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X