10ம் வகுப்பு புத்தகங்களில் ஜனநாயகம், கட்சிகள் பாடம் நீக்கம்
10ம் வகுப்பு புத்தகங்களில் ஜனநாயகம், கட்சிகள் பாடம் நீக்கம்

10ம் வகுப்பு புத்தகங்களில் ஜனநாயகம், கட்சிகள் பாடம் நீக்கம்

Updated : ஜூன் 02, 2023 | Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்களில், ஜனநாயகத்துக்கான சவால்கள், அரசியல் கட்சிகள், எரிசக்தி ஆதாரங்கள் உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், அனைத்து வகுப்புகளுக்கான பாட புத்தகங்களை வெளியிடுகிறது. இது, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம் மற்றும் பல மாநில
Deletion of democracy, parties in class 10 books  10ம் வகுப்பு புத்தகங்களில் ஜனநாயகம், கட்சிகள் பாடம் நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்களில், ஜனநாயகத்துக்கான சவால்கள், அரசியல் கட்சிகள், எரிசக்தி ஆதாரங்கள் உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.


என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், அனைத்து வகுப்புகளுக்கான பாட புத்தகங்களை வெளியிடுகிறது. இது, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம் மற்றும் பல மாநில கல்வி வாரியங்களால் பயன்படுத்தப்படுகின்றன.


கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், இந்த பாட புத்தகங்களில் சில பகுதிகள் நீக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.


latest tamil news

இந்நிலையில், 10ம் வகுப்புக்கான அறிவியல் மற்றும் ஜனநாயகம் ஆகிய பாட புத்தகங்களில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அறிவியல் புத்தகத்தில், தனிமங்களின் கால அட்டவணை, எரிசக்திக்கான ஆதாரங்கள், இயற்கை ஆதாரங்கள் பாதுகாப்பு ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. ஜனநாயகம் புத்தகத்தில், முக்கிய போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், ஜனநாயகத்துக்கான சவால்கள் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (5)

Anand - chennai,இந்தியா
02-ஜூன்-202312:50:46 IST Report Abuse
Anand நம் நாட்டில் ஜனநாயகம் எல்லை மீறிவிட்டது, கடைந்தெடுத்த தேசத்துரோகிகள் வெவ்வேறு கட்சிகளின் பெயரில் நாட்டை சுரண்டிக்கொண்டும் பிரிவினைவாதிகளை ஊக்கப்படுத்திக் கொண்டும், தீவிரவாதிகளுக்கு துணை போவதுமாக தங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயார் என கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த சூழ்நிலையில் சர்வாதிகார போக்குடன் இரும்புக்கரம் கொண்டு இப்படிப்பட்ட அயோக்கியர்களை அழித்தொழிக்கப்படவேண்டும்.....
Rate this:
Cancel
02-ஜூன்-202311:56:27 IST Report Abuse
அப்புசாமி நடப்பது செங்கோல் ஆட்சி. இதில் ஜனநாயகம் போன்ற பாடங்களுக்கு இடமில்லை.
Rate this:
Cancel
02-ஜூன்-202310:52:21 IST Report Abuse
ஆரூர் ரங் படிப்பை பாதியில் கைவிடும் நிலைக்கு கூடுதல் பாடச்சுமைதான் காரணம்.😪 எவ்வளவுதான் வாக்குரிமை ஜனநாயகக் கடமைகளைப் பற்றி பள்ளிகளில் கற்றுக் கொடுத்தாலும் 1000, சரக்கு பிரியாணிக்குதான் ஓட்டு விலை போகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X