'கழிவுநீர் தொட்டியில் மனிதர்களை இறக்கினால் '5 ஆண்டு சிறை'
'கழிவுநீர் தொட்டியில் மனிதர்களை இறக்கினால் '5 ஆண்டு சிறை'

'கழிவுநீர் தொட்டியில் மனிதர்களை இறக்கினால் '5 ஆண்டு சிறை'

Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: ''அபாயகரமான முறையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை இறக்கினால், ஐந்து ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும்,'' என, தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.துாய்மை பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று, சென்னையில் உள்ள குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில், தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன்
5 years in jail if people are dumped in sewage tank   'கழிவுநீர் தொட்டியில் மனிதர்களை இறக்கினால் '5 ஆண்டு சிறை'

சென்னை: ''அபாயகரமான முறையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை இறக்கினால், ஐந்து ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும்,'' என, தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.

துாய்மை பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று, சென்னையில் உள்ள குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில், தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் பேசியதாவது:

அபாயகரமான முறையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால், மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 பிரிவு, 7ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரிவு, 9ல், 2 ஆண்டு சிறை, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை மீறுவோருக்கு, 5 ஆண்டு சிறை, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

யாராவது மனிதர்களை பயன்படுத்தினால், 'சபாய் மித்ரா சுரக் ஷா சேலஞ்ச்' திட்டத்தில் துவங்கிய, கட்டணமில்லா 14420 என்ற தேசிய உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (10)

02-ஜூன்-202313:31:38 IST Report Abuse
முருகன் பெயரளவுக்கு ஒரு சட்டம் தேவை கண்கானிப்பு
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
02-ஜூன்-202313:06:04 IST Report Abuse
sahayadhas நாள் ஒன்றுக்கு 3000 ரூ சம்பளம் என்றால் நான் வேலை செய்வேன்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-ஜூன்-202312:46:16 IST Report Abuse
Ramesh Sargam ஒருசிலருக்கு தண்டனை கொடுத்து இதை நிரூபிக்கவேண்டும். வெறுமனே காகிதத்தில் சட்டம் இருந்தால் மட்டும் போதாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X