வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பழநி: '' புதிய பார்லிமென்டில் பிரதமர் மோடி உயரிய இடத்தில் செங்கோலை வைத்துள்ளார். இது தமிழகத்திற்கு பெருமையை ஏற்படுத்துகிறது,'' என, பழநி சாது சண்முக அடிகளார் கூறினார்.
டில்லியில் நடந்த புது பார்லிமென்ட் திறப்பு விழாவில் பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆசி வழங்கிய பழநி சாது சண்முக அடிகளார், நேற்று மாலை பழநி ஆசிரமத்திற்கு திரும்பினார். அவருக்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் சாது சண்முக அடிகளார் மடத்தில் பேசியதாவது: முந்தைய பார்லிமென்ட் 90 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதன் நிர்வாகம், அலுவலக பணி தொடர்பாக ஆண்டு தோறும் ரூ.1500 கோடி செலவானது. தற்போது அமைந்துள்ள பார்லிமென்ட் கட்டடத்தில் நிர்வாக அலுவலகங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் மிகப்பெரிய செலவு குறையும்.
![]()
|
புதிய பார்லிமென்டில் பிரதமர் மோடி உயரிய இடத்தில் செங்கோலை வைத்துள்ளார். இது தமிழகத்திற்கு பெருமையை ஏற்படுத்துகிறது. இந்நிகழ்ச்சிக்கு பழநியிலிருந்து என்னையும், புலிப்பாணி பாத்திர சுவாமிகளையும் அழைத்தனர். இது பழநிக்கு பெருமையானது.
பார்லிமென்டில் பிரதமர் நடந்து கொண்ட விதம் நாட்டில் இனி அவரது ஆட்சி தொடரும் என்பதை உணர்த்துகிறது. தமிழை மிகப் பழமையான மொழி என பறைசாற்றுகிறார், என்றார்