எஸ்.ஐ.,க்கு 'சல்யூட்': வழியனுப்பி வைத்த எஸ்.பி.,
எஸ்.ஐ.,க்கு 'சல்யூட்': வழியனுப்பி வைத்த எஸ்.பி.,

எஸ்.ஐ.,க்கு 'சல்யூட்': வழியனுப்பி வைத்த எஸ்.பி.,

Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
ஊட்டி : ஊட்டியில் பணி ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,க்கு 'சல்யூட்' அடித்த எஸ்.பி., தனது வாகனத்தில் வீட்டுக்கு வழியனுப்பி வைத்தார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.ஐ., ரேங்கில் ரவி என்பவர் அலுவலக பதிவேடுகளை பராமரிக்கும் பணி செய்து வந்தார். 1988ல் பணியில் சேர்ந்து, 35 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றி கடந்த மாதம், 31ல் ஓய்வு பெற்றார்.இவருக்கு அலுவலகத்தில் நடந்த பிரவுபசார
Salute to SI: Sent by SB,  எஸ்.ஐ.,க்கு 'சல்யூட்': வழியனுப்பி வைத்த எஸ்.பி.,

ஊட்டி : ஊட்டியில் பணி ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,க்கு 'சல்யூட்' அடித்த எஸ்.பி., தனது வாகனத்தில் வீட்டுக்கு வழியனுப்பி வைத்தார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.ஐ., ரேங்கில் ரவி என்பவர் அலுவலக பதிவேடுகளை பராமரிக்கும் பணி செய்து வந்தார். 1988ல் பணியில் சேர்ந்து, 35 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றி கடந்த மாதம், 31ல் ஓய்வு பெற்றார்.

இவருக்கு அலுவலகத்தில் நடந்த பிரவுபசார நிகழ்ச்சியில், எஸ்.பி., பிரபாகர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். 'ஸ்பெஷல் பிராஞ்ச்' இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் அலுவலக பணியாளர்கள் அவரின் பணியை பாராட்டி பேசினர்.

இதை தொடர்ந்து, தனது வாகனத்தில் ரவியை ஏற்றி 'சல்யூட்' அடித்த எஸ்.பி., ஊட்டி ஜெயில்ஹில் பகுதியில் உள்ள ரவியின் வீட்டுக்கு வழியனுப்பி வைத்தார். ரவியின் சிறப்பான பணிக்கு, 2021-22 ஆண்டுக்கான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (5)

Dhandapani - Madurai,இந்தியா
09-ஜூன்-202307:39:41 IST Report Abuse
Dhandapani இருவருக்கும் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-ஜூன்-202312:57:38 IST Report Abuse
Ramesh Sargam பெரிய அதிகாரிகள் இதுபோன்று நடந்துகொண்டு, சிறியவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். வாழ்த்துக்கள் இருவருக்கும்.
Rate this:
Cancel
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
02-ஜூன்-202311:52:01 IST Report Abuse
NALAM VIRUMBI வாழ்த்துக்கள் வளத்துடன் வாழ்க இவரை மாற்ற காவலர்கள் ஒரு முன்னுதாரணமாக கொண்டு செயல்பட்டால் மக்களின் நன்மதிப்பை எப்போதும் பெறலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X