5 வாக்குறுதிகளுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: இந்தாண்டு அமல்
5 வாக்குறுதிகளுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: இந்தாண்டு அமல்

5 வாக்குறுதிகளுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: இந்தாண்டு அமல்

Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகளுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 5 உத்தரவாத வாக்குறுதிகளை அளித்தது. தேர்தலில் வெற்றி ஆட்சி அமைத்த நிலையில் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த
Karnataka Cabinet Meeting: Siddaramaiah govt to implement all 5 guarantees this year5 வாக்குறுதிகளுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: இந்தாண்டு அமல்

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகளுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 5 உத்தரவாத வாக்குறுதிகளை அளித்தது. தேர்தலில் வெற்றி ஆட்சி அமைத்த நிலையில் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.


இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறியதாவது:

‛க்ருஹ ஜோதி' என்ற திட்டம் மூலம் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ஜூலை 1ல் துவங்கும். ஆனால், ஏற்கெனவே உள்ள நிலுவைத் தொகைகளை வாடிக்கையாளர்கள் கட்ட வேண்டும்.


‛ க்ருஹ லக்ஷ்மி என்ற திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 மாதந்தோறும் வழங்கும் திட்டம் ஆகஸ்ட் 15- முதல் அமல்படுத்தப்படும்.


‛ அன்ன பாக்யா' திட்டம் மூலம் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு ஜூலை 1-முதல் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.


பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம் வழங்கும் திட்டம் ஜூன் 11 முதல் நடைமுறைக்கு வரும். ஆனால், கர்நாடகா மாநிலத்திற்குள் மட்டுமே இச்சலுகையை பெறலாம். ஏசி மற்றும் சொகுசுப் பேருந்துகளிலும் இந்தச் சலுகை இல்லை. ஆண்களுக்கு 50 சதவீத இருக்கை ஒதுக்கப்படும். மற்ற இருக்கைகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.


யுவாநிதி திட்டத்தின் கீழ், 2022 - 2023 கல்வியாண்டில் பட்டப்படிப்பை முடித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-ஜூன்-202321:03:53 IST Report Abuse
Ramesh Sargam நாம் பல விளம்பரங்களை பார்த்திருப்போம். விளம்பரம் மக்களை மிகவும் கவர்வதாக இருக்கும். நாமும் அந்த விளம்பரத்தை முற்றிலும் பார்க்கவோ, படிக்கவோ மாட்டோம். மேலோட்டமாக பார்த்து பொருட்களை வாங்குவோம். பொருட்களை வாங்கும்போதுதான் தெரியும், அந்த விளம்பரத்தின் அடியில் சிறிய எழுத்தில் "conditions apply" என்று எழுதியிருக்கும். அதன்முன் ஒரு ஸ்டார் மார்க் இருக்கும். அதுபோலத்தான் இந்த அரசியல் வியாபாரிகளும். ஆம், தேர்தலுக்கு முன்பு பல இலவசங்களை, பல உறுதிமொழிகளை வழங்குவார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன், நாங்கள் பெண்களுக்கு இலவசம் என்று கூறினோம். ஆனால் எல்லா பெண்களுக்கும் இல்லை என்று கூறி ஏமாற்றுவார்கள். பத்திரிகை விளம்பரத்தில் ஸ்டார் மார்க் இருக்கும். ஆனால் இந்த திருட்டு அரசியல்வாதிகள் வாக்குறுதியில் அது இருக்காது. மொத்தத்தில் இவர்கள் வாக்குறுதி ஒரு ஏமாற்றுவேலை.
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
02-ஜூன்-202320:51:40 IST Report Abuse
Balasubramanian தமிழகம் போல் September 5 என்று, மூன்று ஆண்டுகள் காத்திருக்க வைக்காமல், உடனடியாக ஆகஸ்ட் 15 என்று அறிவித்ததற்கு மக்கள் நன்றி தெரிவித்து கொள்கிறார்கள்
Rate this:
Cancel
02-ஜூன்-202319:35:48 IST Report Abuse
குமரி குருவி இன்று போய் நாளை வாகதைதான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X