பல்லடம் அரசு மருத்துவமனையில் 1950ல் இருந்த வசதியே இன்றும் உள்ளன:  தன்னார்வலர்கள் கருத்து
பல்லடம் அரசு மருத்துவமனையில் 1950ல் இருந்த வசதியே இன்றும் உள்ளன: தன்னார்வலர்கள் கருத்து

பல்லடம் அரசு மருத்துவமனையில் 1950ல் இருந்த வசதியே இன்றும் உள்ளன: தன்னார்வலர்கள் கருத்து

Updated : ஜூன் 02, 2023 | Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில், சப் கலெக்டர் ஸ்ருத்தன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார். அண்ணாதுரை (சமூக ஆர்வலர்) : மருத்துவமனைக்கு வசதிகளை செய்வதற்கு முன் போதிய மருத்துவர், பணியாளர்களை நியமிக்க வேண்டும். 1950வ் இருந்த வசதிகளை மருத்துவமனையில் இன்றும் உள்ளது. நோயாளிகள் நல சங்கம் என்பது அரசியல் கருத்து வேறுபாடு இன்றி இருக்க வேண்டும். அரசியல்
Palladam Govt Hospital still has 1950 facilities: Volunteers say  பல்லடம் அரசு மருத்துவமனையில் 1950ல் இருந்த வசதியே இன்றும் உள்ளன:  தன்னார்வலர்கள் கருத்து

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில், சப் கலெக்டர் ஸ்ருத்தன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.

அண்ணாதுரை (சமூக ஆர்வலர்) : மருத்துவமனைக்கு வசதிகளை செய்வதற்கு முன் போதிய மருத்துவர், பணியாளர்களை நியமிக்க வேண்டும். 1950வ் இருந்த வசதிகளை மருத்துவமனையில் இன்றும் உள்ளது. நோயாளிகள் நல சங்கம் என்பது அரசியல் கருத்து வேறுபாடு இன்றி இருக்க வேண்டும். அரசியல் பிரமுகர்களை உள்ளே நுழைப்பதால் இங்கு எதுவுமே நடப்பதில்லை. தன்னார்வலர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். சிறிய காயங்களுக்கும் கூட பரிந்துரை செய்கின்றனர். 1950ல் உள்ள வசதிகளே மருத்துவமனையில் இன்றும் உள்ளது. தன்னார்வல்கள் உட்பட ரோட்டரி அரிமா சங்கம் உள்ளிட்டவை
மருத்துவமனைக்கு ஏராளமாக செய்கின்றனர். ஆனால் அவற்றை முறையாக பராமரிப்பது இல்லை.

ஆறுமுகம் ( ரெயின்போ ரோட்டரி சங்க தலைவர்) : பல்லடம் அரசு மருத்துவமனைக்கு, ரத்த வங்கி டயாலிசிஸ் என, தேவைகள் அதிகம் உள்ளது. யாரையும் குறை சொல்லி எந்த பயனும் இல்லை. தேவையான வசதிகள் நோயாளிகளுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை வேண்டும். நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் செய்து தருகிறோம் என்று கேட்டதற்கு, இதெல்லாம் திருப்பூரில் சென்று பேசிக் கொள்ளுங்கள் என்றனர். இதனால் இந்த ஆம்புலன்ஸ் திட்டம் தற்போது மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்கிறது. ஏற்கனவே செய்து கொடுத்த அவசர சிகிச்சை பிரிவுக்கே மருத்துவர்கள் இல்லாத சூழலில், எவ்வாறு புதிய வசதிகளை ஏற்படுத்தித் தருவது.

முன்னதாக, மருத்துவமனை வார்டுகளை ஆய்வு செய்த சப் கலெக்டர் கூட்டத்தில் பங்கேற்றார் மருத்துவமனையின் தேவைகள் மற்றும் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
03-ஜூன்-202306:42:01 IST Report Abuse
Mani . V திமுக வுக்கு முட்டுக் கொடுக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் வரிசையாக மேடைக்கு வந்து முட்டுக் கொடுத்து பேசிவிட்டு, சினிமா வாய்ப்பை பெற்றுக்கொள்ளும்படி விழாக்குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-ஜூன்-202322:30:44 IST Report Abuse
Ramesh Sargam நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து இவ்வளவு ஆண்டுகள் ஆகியும், பல்லடம் அரசு மருத்துவமனையில் 1950ல் இருந்த வசதியே இன்றும் உள்ளது என்பதை அறியும்போது மனது மிக மிக வலிக்கிறது. தேவையற்றவர்களுக்கு தெரு தெருவா சிலை, அவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களுக்கு கோடிக்கணக்கில் சிலை. ஆனால் மக்களின் உயிரை காக்கும் மருத்துவமனைக்கு ஒன்றும் கிடையாது. என்னய்யா ஆட்சி நடத்துகிறீர்கள்? வெட்கமாக இல்லை உங்களுக்கு. எதற்கு முக்கியத்துவம் கொடுத்து, மக்களின் வரிப்பணம் எதற்கு செலவழிக்கவேண்டும் என்று உங்களுக்கு தெரியவில்லையா? தெரியவில்லை என்றால் பதவி விலகுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X