புதிய பார்லி., சுவரோவியம்: அதிகாரி விளக்கம்
புதிய பார்லி., சுவரோவியம்: அதிகாரி விளக்கம்

புதிய பார்லி., சுவரோவியம்: அதிகாரி விளக்கம்

Updated : ஜூன் 03, 2023 | Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: புதிய பார்லிமென்டில் வரையப்பட்டுள்ள சுவரோவியத்துக்கு, நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. சர்ச்சைதலைநகர் டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டடம், கடந்த 28ல் திறந்து வைக்கப்பட்டது. இதில் உள்ள சுவரோவியத்தில் இந்திய வரைபடம் இடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: புதிய பார்லிமென்டில் வரையப்பட்டுள்ள சுவரோவியத்துக்கு, நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.




latest tamil news



சர்ச்சை


தலைநகர் டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டடம், கடந்த 28ல் திறந்து வைக்கப்பட்டது. இதில் உள்ள சுவரோவியத்தில் இந்திய வரைபடம் இடம் பெற்றிருந்தது. இதில், நம் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பாகிஸ்தானின் பகுதிகளும் இடம் பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்தது.




எதிர்ப்பு


இந்த வரைபடத்தை, 'அகண்ட பாரதம்' என்ற பெயரில், சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.


latest tamil news


இதற்கு, நேபாளத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.


இதையடுத்து, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:


பார்லிமென்டில் உள்ள சுவரோவியத்தில் அசோக சக்கரவர்த்தியின் ஆட்சி காலம் மற்றும் அதற்கு முந்தைய வரலாறு மற்றும் பரப்பளவு தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது.


இதற்கு மேல் கூறுவதற்கு இந்த விஷயத்தில் எதுவும் இல்லை. இது குறித்து சில அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்து பற்றி, எதுவும் கூற விரும்பவில்லை.


இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

03-ஜூன்-202312:33:44 IST Report Abuse
அப்புசாமி ராமர் காலத்துல, அசோகர் காலத்துல ஸ்ரீலங்காவும் நாம் வென்ற பகுதிகள். மகாபாரதத்தில் ஆப்கானிஸ்தான், சீனா நமது சாம்ராஜ்யத்தின் பகுதிகள். சிலர் காலத்தில் கடாரம் நமது பகுதி. அதெல்லாற்றையும் சேது படி வேண்டியதுதானே கோவாலு. அமெரிக்காவில் கபில முனிவர் தபஸ் பண்ணியிருப்பதால் அது கபிலாரண்ய க்ஷேத்ரம் நு அழைக்கப்படுகிறது. உலகமே இந்தியா கோவாலு.
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
03-ஜூன்-202308:52:32 IST Report Abuse
R.RAMACHANDRAN மக்கள் வாக்கு வங்கிக்காக பழம்பெருமைகளை பற்றி விளக்கிக் கொண்டிருக்க நாடாளுமன்றத்தை உபயோகப்படுத்தாமல் நடைமுறை பிரச்சனைகளுக்கு தீர்வு காண பயன்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X