போலி நிறுவனங்கள் வாயிலாக ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு 10,000  கோடி ரூபாய்!
போலி நிறுவனங்கள் வாயிலாக ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு 10,000 கோடி ரூபாய்!

போலி நிறுவனங்கள் வாயிலாக ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு 10,000 கோடி ரூபாய்!

Updated : ஜூன் 03, 2023 | Added : ஜூன் 03, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி,- கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வருமான வரி நிரந்தர கணக்கு எண்களை முறைகேடாக பயன்படுத்தி, 2,660 போலி நிறுவனங்கள் துவங்கி, ஜி.எஸ்.டி., வரிப் பலனில் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்த எட்டு பேர் அடங்கிய கும்பலை, நொய்டா போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்தவரும், ஊடக நிறுவனத்தில் செய்தி ஆசிரியராக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,- கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வருமான வரி நிரந்தர கணக்கு எண்களை முறைகேடாக பயன்படுத்தி, 2,660 போலி நிறுவனங்கள் துவங்கி, ஜி.எஸ்.டி., வரிப் பலனில் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்த எட்டு பேர் அடங்கிய கும்பலை, நொய்டா போலீசார் கைது செய்தனர்.



latest tamil news


உத்தர பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்தவரும், ஊடக நிறுவனத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருபவருமான நபர், கடந்த மாதம் 10ம் தேதி போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

இதில், பஞ்சாபின் லுாதியானா மற்றும் மஹாராஷ்டிராவின் சோலாபூரில் தன், 'பான் கார்டு' எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை பயன்படுத்தி இரண்டு போலி நிறுவனங்கள் துவங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.


போலீசார் விசாரணை



இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், நொய்டாவை சேர்ந்த எட்டு பேர் அடங்கிய கும்பலை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவர்கள் நடத்தி வந்த அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட எட்டு பேர் உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் புதுடில்லியை சேர்ந்தவர்கள்.

இவர்கள், தனிப்பட்ட நபர்களின் தகவல்களை விற்பனை செய்யும் முகவர்கள் வாயிலாக, தனிநபர்களின் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, வங்கி கணக்கு எண், வருமான வரி நிரந்தர கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை பெற்று, அந்த பெயரில் வாடகை ஒப்பந்தம் போடுகின்றனர்.

அதன் பின், வருமானத்துக்கு வழியில்லாத குடிசை பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களை பிடித்து, அவர்களின் ஆதார் அட்டையை 1,000 முதல் 1,500 ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர். அந்த அட்டைகளில் தங்களுடைய தொலைபேசி எண்களை மாற்றுகின்றனர்.

இந்த ஆவணங்களை பயன்படுத்தி நாடு முழுதும் பல்வேறு பகுதிகளில் போலி நிறுவனங்கள் துவக்குகின்றனர்.

இந்த போலி நிறுவனங்கள் வாயிலாக, மாதம் தலா 3 - 4 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக கணக்கு காட்டுகின்றனர்.


இழப்பு



இதன் அடிப்படையில் ஜி.எஸ்.டி., வரிப் பலன்களுக்கு விண்ணப்பித்து, பல கோடி ரூபாயை அரசிடம் இருந்து முறைகேடாக பெறுகின்றனர்.

அதோடு, இவர்கள் துவங்கிய போலி நிறுவனங்களை 90,000 ரூபாய் வரை மற்றவர்களிடம் விற்பனை செய்கின்றனர்.


latest tamil news


இந்த போலி நிறுவனங்களை வாங்குவோர், வரி ஏய்ப்பு செய்வதற்கு இவற்றை பயன்படுத்தி, கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தர உதவுகின்றனர்.

இந்த கும்பலிடம், 6 லட்சத்து, 35 ஆயிரம் வருமான வரி நிரந்தர கணக்கு எண்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 2,660 போலி நிறுவனங்களை துவங்கிஉள்ளனர்.

ஜி.எஸ்.டி., வரிப்பலன்களை முறைகேடாக பெற்றதன் வாயிலாக, அரசுக்கு 10,000 கோடி ரூபாய் வரை இவர்கள் இழப்பு ஏற்படுத்தி இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (3)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03-ஜூன்-202313:19:03 IST Report Abuse
Ramesh Sargam வரி கட்டாமல் ஏமாற்றும் போலிநிறுவன முதலாளிகளை பிடித்து சிறையில் அடையுங்கள். மேலும் அந்த நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கி, விற்று வரியிழப்பை சரிசெய்யுங்கள். முடியுமா?
Rate this:
Cancel
03-ஜூன்-202310:58:37 IST Report Abuse
ranga1530@gmail.com நிட்பந்தி தோல்வியடைந்த திற்கு காரணமே வடக்கத்யிய பனியாக்களும்,தெற்கத்திய திராவிடியாக்களும் முன்னாடியே விஷயம் தெரிஞ்சு பணத்தை மாத்திட்டதுதான். வெறும் 96000 கோடிதான் திரும்ப வந்திச்சாம். அதிகாரத்தில் இருப்பவங்க உதவி இல்லாம இப்பிடி நடக்குமா கோவாலு? தற்போதைய 2000 ரூவா நோட்டு மாற்றமும் இதே மாதிரிதான் முடியும்.
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
03-ஜூன்-202307:57:22 IST Report Abuse
வாய்மையே வெல்லும் நாட்டில் கலவரம் எப்படி நடக்குதுன்னு பார்த்தேங்கன்னா இந்த கருப்பு ஆட்டின் கருப்பாக ஆட்டைய போடபட்ட பணம் எங்கயோ விளையாடுது.. அதை கண்டுபிடித்த அரசு மின்னணு பொறியாளர்களுக்கு நன்றி . இந்த தேசதுரோகிகளின் முகத்திரையை கிழித்து நிரந்தரமாக அந்தமான் தீவில் வனவிலங்குகளை உண்பதற்கு தானமாக கொடுத்துவிடவேணும்.. ஊரில் வேஷம் போடுபவன் தான் பச்சை துரோகி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X