வனப்பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா ஐகோர்ட் தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்
வனப்பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா ஐகோர்ட் தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்

வனப்பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா ஐகோர்ட் தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்

Updated : ஜூன் 03, 2023 | Added : ஜூன் 03, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி,-மத்திய அரசின் வனப்பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா மீது பொதுமக்கள் கருத்துக்களை வரவேற்று பார்லிமென்ட் கூட்டுக்குழு வெளியிட்ட அறிக்கைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மத்திய அரசு இயற்றியுள்ள வனப்பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-மத்திய அரசின் வனப்பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா மீது பொதுமக்கள் கருத்துக்களை வரவேற்று பார்லிமென்ட் கூட்டுக்குழு வெளியிட்ட அறிக்கைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.



latest tamil news


மத்திய அரசு இயற்றியுள்ள வனப்பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, பார்லிமென்ட் கூட்டுக்குழு அறிவிக்கை வெளியிட்டது. மக்கள் தங்கள் கருத்துக்களை 15 நாட்களுக்குள், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், வனத்துறை பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துக்களை தெரிவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மக்களுக்கு அந்த இரண்டு மொழிகளுமே தெரியாத நிலையில், எவ்வாறு அவர்களால் கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என மனுவில் கேள்வி எழுப்பப்பட்டது.


latest tamil news


மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் அறிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''வரும் 5ம் தேதியன்று இந்த மசோதா தமிழிலும் வெளியிடப்படும்,'' என, நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், ஜூலை முதல் வாரத்தில் விசாரணை துவங்கும் என உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (6)

M S RAGHUNATHAN - chennai,இந்தியா
03-ஜூன்-202311:12:43 IST Report Abuse
M S RAGHUNATHAN இந்த திருத்த மசோதாவை உருதுவில் வெளியிட வேண்டும். அப்போது தான் கருத்து சொல்ல முடியும் என்று சொன்னால் உயர்நீதிமன்றம் மீண்டும் ஒரு தடை விதிக்க வாய்ப்பு உண்டு.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
03-ஜூன்-202311:08:44 IST Report Abuse
M S RAGHUNATHAN எனக்கு சென்னை தமிழில் வேண்டும். எந்த அடிப்படையில் உயர் நீதி மன்றம் தடை விதித்தது ? எந்த அடிப்படையில் உச்ச நீதி மன்றம் தடையை நீக்கியது. ஒரு வேளை வெவ்வேறு பாடத்திட்டத்தில் படித்தவர்களா? ( சமச்சீர், சிபிஎஸ்இ போன்று,). உயர் நீதி மன்றம் தவறாக தடை கொடுத்து இருந்தால் உச்ச நீதி மன்றம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ?
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
03-ஜூன்-202309:23:29 IST Report Abuse
r ravichandran இது போன்ற விஷயங்களில் குறைந்த பட்சம் 10 மொழிகளில் வெளி இட்டு மற்ற மாநில மக்களும் தெரிந்து கொள்ளும் அளவுக்கு செயல் படுத்த படவேண்டும்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
03-ஜூன்-202314:16:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அப்படிப்பட்ட எண்ணம் அரசுக்கு இருந்தால் தானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X