ஜூலையில் உலகத்தமிழ்  ஆராய்ச்சி  மாநாடு
ஜூலையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு

ஜூலையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு

Added : ஜூன் 03, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை--உலகத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் சார்பில், அடுத்த மாதம் 7, 8, 9 ஆகிய நாட்களில், சென்னையில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்க உள்ளது.இதுகுறித்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் நிர்வாகிகள் கூறியதாவது:சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் கல்வி நிறுவனத்தில், அடுத்த மாதம் 7, 8, 9 ஆகிய தேதிகளில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில், 17 நாடுகளைச்
International Research Conference in July    ஜூலையில் உலகத்தமிழ்  ஆராய்ச்சி  மாநாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை--உலகத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் சார்பில், அடுத்த மாதம் 7, 8, 9 ஆகிய நாட்களில், சென்னையில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்க உள்ளது.

இதுகுறித்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் நிர்வாகிகள் கூறியதாவது:

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் கல்வி நிறுவனத்தில், அடுத்த மாதம் 7, 8, 9 ஆகிய தேதிகளில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில், 17 நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக வந்த, 1,057 கட்டுரைகளில், 350 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன; 200 கட்டுரைகள் அரங்கில் வாசிக்கப்படும். இதில் பங்கேற்க, கட்டுரையாளர்களுக்கு கட்டணம் இல்லை. பங்கேற்பாளர்களுக்கு, மூன்று நாட்களுக்கு 3,000 ரூபாய் கட்டணம்.

மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர், www//registration.icsts11.org/v என்ற இணைதள முகவரி யில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி பேரவையின் தலைவர் பொன்னவைக்கோ, துணைத் தலை வர் சுந்தரமூர்த்தி, செயலர் உலகநாயகி பழனி, மாநாடு ஏற்பாட்டுக்குழு தலைவர் ஜான் சாமுவேல், கட்டுரை ஒருங்கிணைப்பாளர் அர்த்தநாரீஸ்வரன், கவிஞர் விஜயகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (9)

MARUTHU PANDIAR - chennai,இந்தியா
03-ஜூன்-202322:32:23 IST Report Abuse
MARUTHU PANDIAR தமிழின் புல் டைம் ஏக போக ஓனர் கம் பாதுகாவலர்கள் நடத்தும் பள்ளிகளில் கிஞ்சித்தும் இந்தியை நுழைய இடம் கொடாமல் இருக்கணும்,,நடக்குமா அப்படீன்னு பேசிக்கராங்க.
Rate this:
Cancel
03-ஜூன்-202311:24:19 IST Report Abuse
ஆரூர் ரங் பேச்சாளர்களை துண்டுசீட்களைப் பார்த்துப் படிக்க அனுமதிக்கக்கூடாது... கீழடியில் ஆயிரம் அடி பள்ளம் தோண்டி அதற்குள் மாநாடு நடத்தலாம். எதிர்கால தொல்பொருளாராயாச்சிக்கு உதவும்.
Rate this:
Cancel
03-ஜூன்-202310:41:25 IST Report Abuse
குமரி குருவி தமிழகத்தில் தமிழ்தொலைத்துக் கொண்டேஇருக்கிறது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X